காங்கிரஸ் கட்சியின் திறமையின்மை அனைவருக்கும் தெரியும்: பா.ஜ.க கருத்து

muktharகாங்கிரஸ் கட்சியின் திறமையின்மை அனைவருக்கும்தெரியும் என பாரதீய ஜனதா கட்சி தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி இன்று கூறினார். மேலும் அவர் கூறும் போது தேர்தல் கருத்துக்கணிப்பை நிறுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது.

கருத்து சொல்பவர்களை அழிக்கலாம் ஆனால் கருத்தை ஒரு போதும் அழிக்க முடியாது என்று கூறினார்.  தேர்தல் கருத்துக்கணிப்புகளை தடை செய்யவேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதில் தேர்தல் கருத்துக்கணிப்புகள் ஆதாரமற்றது. நம்பகதன்மை இல்லாதது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS: