4 தலைமுறைகளாக ஏழ்மையை பற்றி பேசி மட்டுமே வந்துள்ள நேருவின் பரம்பரை: மோடி தாக்கு

modi2இந்தூர், நவ. 23- மத்திய பிரதேச மாநில தேர்தலையொட்டி இந்தூர் நகரில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா, ராகுல் ஆகியோரின் 4 தலைமுறை பேச்சுகளை கவனித்து பாருங்கள் இவர்கள் பேசும் நூற்றில் 80 வார்த்தைகள் ஏழை, ஏழ்மை என்று தான் இருக்கும்.
4 தலைமுறைகளாக இதே வார்த்தையை தொடர்ந்து பேசி வருவதன் மூலம் இவர்கள் ஏழ்மையை பற்றி பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இவர்களின் தலைமையில் இவ்வளவு காலம் நடந்த ஆட்சியின் மூலம் ஏழ்மை விரட்டப்படவில்லை என்பதை தான் இன்றும் இவர்கள் ஏழையை பற்றியும், ஏழ்மையை பற்றியும் பேசுவதை வைத்து புரிந்துக் கொள்ள முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

TAGS: