அமெரிக்கா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – இந்தியா அறிவிப்பு

usஇந்திய பெண் தூதர் கைது நடவடிக்கையில் அமெரிக்கா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும் வரை அந்நாட்டுக்கு எதிரான நெருக்குதல் நடவடிக்கை தொடரும் என இந்தியா அறிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்புச் சுவர்களை அகற்றி தூதரகத்திற்கென அளிக்கப்பட்டிருந்த சிறப்பு பாதுகாப்பினை அகற்றிவிட்ட இந்தியா இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று கூறியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கமல்நாத் ஒவ்ª£ரு நாட்டுக்கும் என தனிப்பட்ட கௌரவம் இருப்பதை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும் என்றார். அமெரிக்கா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும் வரை அந்நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்று அவர் கூறினார்.

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிர்கட்சியான பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கும், தூதரக அதிகாரிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது இந்தியாவின் கடமை என்று அமெரிக்கா கூறியுள்ளது.

TAGS: