தூதரக பெண் பிரச்சினை தொடர்பில் மத்திய அரசு காட்டும் அக்கறை, தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் வேண்டும்: ஜி.கே.வாசன்

gkvaasan000அமெரிக்காவில் இந்திய தூதரக பெண் அதிகாரிக்கு ஏற்பட்ட அவமரியாதை செயலுக்கு மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய மந்திரி ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

டெல்லியில் இருந்து நேற்று மாலை சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கருத்து வெளீயிட்டார்.

தூதரக பெண் பிரச்சினை தொடர்பில் மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையுடன் வலுவாக செயல்பட்டு முனைப்பு கட்டினார்கள். அதுபோல் தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் முனைப்பு காட்ட வேண்டும்.

மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினை முக்கியமான ஒன்றாகும். மத்திய, மாநில அரசுகள் இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளை இந்த மாத இறுதிக்குள் சந்தித்து பேச நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இலங்கைக்கு வலுவான, உறுதியான முறையில் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள் மற்றும் மக்களின் ஒருமித்த விருப்பமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

TAGS: