இலங்கை மீனவர்கள் கேட்டதற்கிணங்க ஒரு மாத காலம் கடலுக்கு செல்வதில்லை என தமிழக மீனவர்கள் முடிவு!

indian_fishersஇலங்கை மீனவர்கள் கேட்டுக்கொண்டதை அடுத்து இந்த மாதம் 13ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை கடலுக்கு செல்லக்கூடாது என தமிழக மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 6 மாவட்ட மீனவப் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தடை செய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக் கூடாது. இலங்கை மீனவர்கள் கேட்டுக்கொண்டதை அடுத்து இந்த மாதம் 13ஆம் தேதி முதல் மார்ச் 10ஆம் தேதி வரை 6 மாவட்ட மீனவர்களும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது.

இலங்கை மற்றும் தமிழக சிறைகளில் உள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க இருநாட்டு அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருநாட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது” உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

TAGS: