அரவிந்த் கெஜ்ரிவால் மர்ம நபரால் மீண்டும் தாக்கப்பட்டுள்ளார்

kejrival_politics_002டெல்லியில் சுல்தான்பூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் மர்ம நபரால் மீண்டும் தாக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் வருகின்ற 10ம் திகதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது.

இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் சுல்தான்பூர் பகுதியில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்துள்ளார்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் கெஜ்ரிவால் கன்னத்தில் அறைந்துவிட்டார்.

இருப்பினும், கெஜ்ரிவால் இப்படி தாக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல, எத்தனையோ முறை அவர் தொடர்ந்து மர்ம நபர்களால் தாக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: