அ.தி.மு.க. 37 தொகுதிகள் வென்றிருப்பதால் எந்த பிரயோஜனமும் கிடையாது: அன்புமணி

Anbumani-Ramadossஅ.தி.மு.க. 37 தொகுதிகள் வென்றிருப்பதால் எந்த பிரயோஜனமும் கிடையாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ள அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியபோது,

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் என்னை வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு தலை வணங்கி என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தொகுதிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்தின் நலனுக்காக நானும், பொன்.ராதாகிருஷ்ணனும் சேர்ந்து பாடுவபடுவோம். தி.மு.க., அ.தி.மு.க. தயவு இல்லாமல் இரண்டு இடங்களை பிடித்திருப்பது ஒரு வரலாற்று சாதனைதான். அ.தி.மு.க. 37 தொகுதிகள் வென்றிருப்பதால் எந்த பிரயோஜனமும் கிடையாது. வர இருக்கும் சட்டமன்ற தோர்தலில் இதே கூட்டணியோடு அ.தி.மு.க.வை ஓரங்கட்டுவோம் என்றார்.

TAGS: