இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்: மத்திய அரசுக்கு மைத்ரேயன் எம்.பி. கோரிக்கை!

maithireyanஇலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என மத்திய அரசுக்கு மைத்ரேயன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

மாநிலங்களவை கூட்டத் தொடர் கடந்த 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் கலந்து கொண்டு அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன் பேசுகையில்,

இந்தியா வலியுறுத்தியும், இலங்கையிலுள்ள மாகாணங்களுக்கு காவல் அதிகாரம் வழங்க இலங்கை மறுத்துள்ளது.

எனவே, இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் மத்திய அரசு தீர்மாணம் கொண்டு வர வேண்டும்.

மேலும், தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

நிரந்தரத் தீர்வு காணும் வகையில் தூதரக நடவடிக்கைகள் அவசியம் எடுக்கப்பட வேண்டும் என்றார்.

TAGS: