குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மகளிர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

 

 

மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகள் கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதை கண்டித்து அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மயிலாடுதுறையில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை சோழம்பேட்டை ஊராட்சியில் கடந்த 24.06.2014 அன்று 5 வயது குழந்தையை, அந்த பகுதியை சார்ந்த முருகேசன் என்ற வாலிபனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாள். தற்போது அந்த குழந்தை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறாள்.

இதை போன்று, குத்தாலம் தாலுக்கா கோடிமங்கலம் ஊராட்சியில் கடந்த 28.06.2014 அன்று 6 வயது குழந்தை, சந்தோஷ் என்ற அரக்க குணம் கொண்ட வாலிபனால் பாலியல் ஆளாகியிருக்கிறாள். இதுபோன்ற அவலங்கள் மயிலாடுதுறை பகுதியில் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமே இருக்கிறது. இதற்கு காரணமான கயவர்களை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்கக் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கூட்டத்தின் வாயிலாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க கோரியும், மனநிலை மருத்துவரை வைத்து, கவுன்சிலிங் கொடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரியும், குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் கோரிக்கைகள் வைத்தனர்.

TAGS: