இலங்கையில் தமிழர்கள் சம உரிமை பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்: வெங்கையாநாயுடு

venggaiyaaஇலங்கையில் தமிழர்கள் சம உரிமை பெற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பிரதமர் மோடி இலங்கைக்கு சென்று அந்த நாட்டில் என்ன பேச உள்ளார்? எந்தெந்த ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்படும்? என்பது பற்றி இங்கு விவாதிக்க முடியாது.

ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 13-வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை மத்திய அரசு வலியுறுத்தும். இலங்கையில் தமிழர்கள், சிங்களர்களுக்கு இணையாக சம உரிமையுடன் வாழ மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

-http://www.nakkheeran.in

TAGS: