விவசாயிகளுக்கு எதிராக எதையும் செய்ய மாட்டோம்: அமைச்சர் கட்கரி

நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம் மீதான பயத்தை விவசாயிகள் நீக்கிவிடுங்கள், விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு எந்த செயலையும் செய்யாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

சமிக்சா அதிவேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நிதின் கட்கரி, மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவாகவே செயல்படும், விவசாயிகளுக்கு அநீதியை இழைக்கும் எந்த செயலிலும் மத்திய அரசு ஈடுபடாது.

நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து யார் ஆலோசனை அளித்தாலும் அதனை ஏற்று நிறைவேற்ற மத்திய அரசு தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.

-http://www.dinamani.com

TAGS: