சர்வதேச தரவரிசையில் முதலிடத்தை பிடித்த சாய்னா நேவால் – பிரதமர் மோடி வாழ்த்து

Saina-Nehwalஇந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் இன்று சர்வதேச தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். அத்துடன், நம்பர்-1 இடத்தைப் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் அவர் எட்டினார்.

உலகின் நம்பர்-1 இடத்தை எட்டிப்பிடித்த சாய்னாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட சாதனைகள் மூலம் சாய்னா நம்மை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளார். அவர் உலகத் தரவரிசையில் முதலிடத்தை பிடித்ததற்கு எனது வாழ்த்துக்கள்” என்று மோடி டுவிட்டரில் தனது வாழ்த்தினை பதிவு செய்துள்ளார்.

-http://www.nakkheeran.in

TAGS: