செய்னா சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்

Saina-Nehwalபுதுடில்லி: இந்திய ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் செய்னா நேவல் சாம்பியன் பட்டம் வென்றார்.

டில்லியில் இந்திய ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், சமீபத்தில் ‘நம்பர்–1’ இடத்திற்கு முன்னேறிய இந்தியாவின் செய்னா, தாய்லாந்தின் ரட்சானக்கை சந்தித்தார். முதல் செட்டை 21–16 என கைப்பற்றிய செய்னா, இரண்டாவது செட்டையும் 21–14 என தன்வசப்படுத்தினார். 49 நிமிடங்கள் மட்டும் நீடித்த போட்டியின் முடிவில், செய்னா 21–16, 21–14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 18–21, 21–13, 21–12 என டென்மார்க்கின் விக்டரை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன் மூலம், இத்தொடரில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை இருவரும் படைத்தனர்.

-dinamalar.com

TAGS: