ஆந்திரத்தில் செம்மரக் கடத்தல்: 72 தமிழர்கள் கைது

semmaramஆந்திரத்தில் செம்மரங்களைக் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 72 தொழிலாளர்களை அந்த மாநில போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

இதுகுறித்து கடப்பா மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கே.அன்புராஜன் கூறியதாவது:

கடப்பா மாவட்டத்தில் உள்ள சின்னமண்டேம் பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்தை சோதனை செய்வதற்காக அதனை போலீஸார் தடுக்க முற்பட்டனர்.

ஆனால், பேருந்தை ஓட்டுநர் நிறுத்தவில்லை. இதையடுத்து அந்தப் பேருந்தை போலீஸார் துரத்திச் சென்று மடக்கினர். பேருந்தில் சோதனையிட்ட போது, அங்கு ஏராளமான செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அதில் இருந்த 1.5 டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.

இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக பேருந்தில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்கள் 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்படுவர் என அவர் தெரிவித்தார்.

-http://www.dinamani.com

TAGS: