மும்பையில் பல லட்சம் பேர் பயன்படுத்தும் மியாவ் மியாவ் போதைப் பொருள்

மிகப்பெரிய வர்த்தக நகரமான மும்பையில் மியாவ் மியாவ் எனும் தடை செய்யப்பட போதைப் பொருள் பல லட்சம் மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

மும்பையின் அனைத்து பெட்டிக்கடைகளிலும் மியாவ் மியாவ் எனும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் மிக அப்பட்டமாக விற்கப்பட்டு வருகிறது.இதையறிந்த போலீசார் தீவிர சோதனை நடத்தியத்தில் இதுவரை 700 கிலோ போதைப்பொருள் சிக்கியுள்ளது. இருப்பினும் சோதனை நடத்தி முடிந்த நிலையில் மீண்டும் போதைப்பொருள் பட்டவர்த்தனமாக விற்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பல லட்சம் மக்கள் இந்த போதைப் பொருளை பயன்படுத்தி வருவதால், இதைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று மும்பை போலீசார் திணறி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

-http://www.4tamilmedia.com

TAGS: