இந்திய சீன கடற்படையினர் மத்தியில் போர் ஏற்படாது: சீனா

inidia_china_war_001இந்து சமுத்திரத்தில் தமது கப்பல்களின் சஞ்சரிப்பு இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாதென சீனா தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் இலங்கைக்கு செல்லும் தமது கப்பல்கள் தொடர்பில் இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை விடுப்பது துரதிஸ்டவசமானது என்று சீனாவின் இராணுவக் கல்லூரியின் உயர் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் இந்தியா திறந்த மனதுடன் செயற்படவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இந்து சமுத்திரத்தில் சீன நீர்மூழ்கிக்கப்பல்களின் நடமாட்டம் இரகசியமானது அல்ல. கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்தக்கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் செயற்படுகின்றன.

இந்திய சீன கடற்படையினர் மத்தியில் கடந்த 50 வருடங்களாக பாரிய புரிந்துணர்வு நிலவுகிறது. அவர்கள் மத்தியில் போர் இடம்பெறும் என்பதை யாராலும் கூறமுடியாது என்றும் உயர்நிபுணரான ஷோ என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: