திருக்குறளை தேசிய நூலாக்கிட வலியுறுத்தி உண்ணாவிரதப்போராட்டம்

thirukkural-notes.2சென்னை வள்ளூவர் கோட்டத்தில் இன்று 30.8.2015ல் திருக்குறளை தேசிய நூலாக்கிட வலியுறுத்தி உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்று வருகிறது.  காலை 7 மணிக்கு துவங்கிய உண்ணா விரதப்போராட்டம் மாலை 6 மணிக்கு நிறைவுபெறுகிறது.

’’வள்ளலார் தமிழ்மன்றம் – திருவெண்காடு’’ சார்பில் இந்த உண்ணாவிரதப்போராட்டம் நடை பெறுகிறது.   வள்ளலார் தமிழ்மன்றம் – திருவெண்காடு தலைவர் வள்ளல்நேயன் மருத்துவர் ஜெய.இராஜமூர்த்தி இப்போராட்டத்திற்கு தலைமையேற்றுள்ளார்.  செயலர் மு.வெங்கடேசபாரதி, துணைத்தலைவர் தில்லைமணி கு.ராமசுப்பிரமணியன், இணைச்செயலர் சொ.தாண்டவமூர்த்தி ஆகியோர் இந்த உண்ணாவிரதபோராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் இந்த போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கைக்கு வலிமை சேர்த்துள்ளார்.

-http://www.nakkheeran.in

TAGS: