கோலாலம்பூரில் இந்தியர்களிடையே இன்று உரையாற்றிய பிரதமர் மோடி தமிழில் ”வணக்கம்” சொல்லி தனது உரையைத் தொடங்கியுள்ளார்.
மலேசியா சென்றுள்ள பிரதமர் மோடி 2வது நாளான இன்று, இந்தியர்களிடையே உரை நிகழ்த்தியுள்ளார்.
வணக்கம் என்று தமிழில் தனது உரையை தொடங்கிய மோடி, எனது அருமை சகோதர சகோதரிகளே. மலேசியாவுக்கு வருவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வளவு பெரிய அரங்கில் உங்கள் மத்தியில் நிற்பதில் பெருமைப்படுகிறேன்.
இந்தியா என்பது தனது எல்லையோடு நின்று விடும் நாடு அல்ல. ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் இந்தியா வியாபித்து நிற்கிறது.
இந்தியா மீதான உங்களது அன்பு ஒருபோதும் சுருங்கி விடவில்லை. உங்களது ஒவ்வொரு விழாவிலும் அதை நான் காண்கிறேன்.
உங்களது அன்பும், நட்பும் மறக்க முடியாதது. உங்கள் முன்பு நான் மாபெரும் புலவர் திருவள்ளுவரின் கருத்தைச் சொல்ல விரும்புகிறேன்.
நட்பு என்பது முகத்தில் தெரியும் புன்னகை மட்டுமல்ல. மாறாக நமது இதயத்தின் அடி ஆழத்திலிருந்து வரும் அது வர வேண்டும் (”முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு”) என்று சொல்லியுள்ளார்.
உங்களது தாத்தாக்களில் பலர் நேதாஜியின் சுதந்திரப் போராட்டத்திற்கு உதவிக் கரம் நீட்டியவர்கள்.
இதற்காக மலாய் இந்தியர்களுக்கு சுதந்திர இந்தியா நன்றிக் கடன்பட்டுள்ளது என பேசியுள்ளார்.
– http://www.newindianews.com
பெயரளவுக்கு தமிழ் மொழியில் சில சொற்களையும், திருவள்ளுவர் பற்றி சிறிதும் பேசிவிட்டு மற்றபடி தமிழ் மொழி, தமிழ் இனத்தின் பெருமையை பறைசாற்றும்விதமாக ஒன்றும் செய்யவில்லை
மாறாக தமிழர்கள் அதிகம் இருக்கும் மலேசியாவில் வடநாட்டவர்களின் சிலையை திறந்து மீண்டும் தங்கள் வடநாட்டு ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளான் கிந்திய நாட்டு பிரதமர் மோ(கே)டி.
>>ஆரிய இந்து அடிவருடி விவேகானந்தன் சிலை திறப்பு
>>கோலாலம்பூரில் உள்ள இந்திய கலாச்சார மையத்திற்கு வங்களான் சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் பெயர் சூட்டப்படுமாம்
>>”It is my proud privilege to announce that we will install bust of Mahatma Gandhi at the Gandhi memorial hall.”
தமிழ் மொழி, தமிழ் இனத்துக்காக ஒரு மயிரையும் புடுங்காத இந்த காந்தி, விவேகாந்தன், போசு
இவன்களின் சிலையை திறப்பதில் தமிழ் மொழி, தமிழ் இனத்துக்கு என்ன பெருமை.
இவர்களை இவன்கள் என்று ஒருமையில் விளிக்க காரணம், இவர்கள் என் மேல் திணிக்கபட்டு கொண்டே இருக்கிறார்கள், திருவள்ளுவர், சோழன் போன்ற தமிழரின் சிலைகள், அடையாளங்கள்
வடநாட்டில் எங்கும் நிறுவபட்டு இருந்திருக்குமானால் நானும் இவர்களின் சிலையை, அடையாளங்களை தமிழர் இடத்தே இருப்பதை அனுமதிக்கலாம்.
தமிழ் மொழி, தமிழ் இனத்துக்கு தொண்டாற்றிய பென்னி குயிக், வீரமாமுனிவர் போன்றவர்கள் அயல்நாட்டவர்கள் என்றாலும் தமிழர்கள் நாம் அவர்களை போற்றி கொண்டாடுகிறோம் அவர்களுக்கு உரிய மரியாதையை வழங்குகிறோம்.
நன்றி பாண்டியன்
இவர் இந்தியாவில் உள்ள தமிழர்களையே மதிபதில்லை …வெளிநாட்டு தமிழர்கள் எதற்கு ?
சுதந்திரம் அடைந்தது முதல் தமிழா நாட்டு தலைவர்களை வாங்க ..விற்க ..வாடகைக்கு எடுக்க வட இந்தியன பழகி விட்டான் ..அடிமைகள் இவன் காலில் விழுந்து கொண்டு நாங்களும் இந்தியர்கள் என்று கூவுகின்றன வெட்ககேடு
விவேகானந்தர், காந்தி, சுபாஸ் சந்திரபோஸ் போன்றோரின் நிலையை ஒருமுகமாகப் பார்த்து கொச்சைப் படுத்துவது சரியல்ல. நமக்கு உரிய அங்கீகாரத்தையும், தமிழர் வரலாறு காட்டும் நினைவுச் சின்னங்களையும் நாம் நிறுவ ஏற்பாடு செய்வது நமது கடமை. நம்மிடம் இருக்கும் உரிமையை பிறருக்குத் தாரைவார்த்துக் கொடுத்து விட்டு பின் அழுவானேன்? கோலாலம்பூரில் எத்துனை தமிழர் இயக்கங்கள் இருக்கின்றன. ஏன் வள்ளுவன் சிலையை சுற்றுலாத்துறை அமைச்சின் அங்கீகாரத்துடன் பிரிக்பீல்ட்ஸ் குட்டி இந்தியா பகுதியில் வைக்க முடியாதா? நாம் முதலில் முயற்சி செய்வோம். அதை விடுத்து பென்னி குயிக், வீரமாமுனிவர் இவர்களுக்கெல்லாம் சிலை வைக்க நம் பணத்தையும், நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்.
“நட்பு என்பது முகத்தில் தெரியும் புன்னகை மட்டுமல்ல. மாறாக நமது இதயத்தின் அடி ஆழத்திலிருந்து வரும் அது வர வேண்டும் (”முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு”) என்று சொல்லியுள்ளார்”
அரசியல் உரைகளை எழுதிக் கொடுக்கும் தனது உதவியாளர்களின் உரைகளைப் படித்து விட்டுப் போகும் அரசியல்வாதிகளுக்கு வள்ளுவரையும் தெரியாது. குறளின் மகத்துவமும் தெரியாது. அப்படி தெரிந்திருந்தால், குறளின் அறத்துப்பாலும் , பொருட்பாலும் இன்றைய இன்டியாவின் அரசியல் சாசனத்தின் ஒரு பகுதியாக விளங்கி இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையே! இண்டியாவில் பகவத் கீதைக்கு கொடுக்கும் மரியாதை சரி நிகர் அளவில் திருக்குறளுக்கும் கொடுத்திருக்க வேண்டும். தமிழரையும், தமிழ் மொழியையும் பின் தள்ள வேண்டும் என்பதே வடவரின் நிரந்திர தீர்மானம் என்பதால் நமக்கு கொடுக்க வேண்டிய மரியாதை வடக்கே என்றென்றும் முகத்தில் தெரியும் புன்னகையை மட்டும் வைத்து, இதயத்தின் அடி ஆழத்திலிருந்து வராமல் பார்த்துக் கொண்டார்கள். அதை மோடி நமக்கு நாசுக்காக தெரிவித்து விட்டுப் போயிருக்கின்றார். உரை எழுதிக் கொடுத்த உதவியாளரே நீர் வாழ்க.
மோடி தமிழர்களின் துரோகி, ராஜபக்சேக்கு சிவப்பு கம்பளம் விரித்து வர வேற்றவர்.