மாவீரர் நாள் நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

21இலங்கை போரில் இறந்த ஈழத்தமிழ் வீரர்களின் நினைவாக மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை மாவீரர் நாள் கூட்டம் நடத்த மதிமுக, நாம் தமிழர், திராவிடர் விடுதலை கழகம் ஆகிய 3 கட்சிகளின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று உயர்நீதிமன்றம் 3 கட்சிகளுக்கும் மாவீரர் தினம் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது,

மதிமுக – சென்னை பெரவள்ளூரிலும், நாம் தமிழர் கட்சி – கரூர் சேத்தியாத்தோப்பில் நிகழ்ச்சி நடத்த அனுமதி, திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மாவட்டம் கொளத்தூரிலும் நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

-http://www.nakkheeran.in

 

TAGS: