தேசிய கீதத்தில் மாற்றம் வேண்டும்: சுப்பிரமணிய சுவாமி

subramanian swamyபுதுடில்லி : இந்திய தேசிய கீதத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு, சுப்பிரமணியசுவாமி கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு சுப்பிரமணிய சுவாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் தேசிய கீதமாக ‘ஜன கண மன..’ பாடலை தேர்தெடுப்பதா அல்லது ‘வந்தே மாதரம்’ பாடலை தேர்ந்தெடுப்பதா என்பது குறித்து பார்லியில் நடந்த விவாதத்தில், அரசியல் நிர்ணய சபை தலைவரான ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1949ம் ஆண்டு நவ., 26ம் தேதி, ஓட்டெடுப்பு நடத்தாமலேயே ‘ஜன கண மன..’ பாடலை தேசிய கீதமாக அறிவித்தார். அப்போது பிற்காலத்தில் பார்லி., உறுப்பினர்களிடம் இது தொடர்பாக ஓட்டெடுப்பு நடத்தி தேவையான மாற்றங்களை செய்துக்கொள்ளலாம் எனவும் ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார்.

மேலும், ‘ஜன கண மன..’ பாடல் பிரிட்டிஷ் மன்னரை வரவேற்க எழுதப்பட்டது எனும் குற்றச்சாட்டு உள்ளதால், பாடலின் 95 சதவீதத்தை அப்படியே வைத்துக்கொண்டு மீதமுள்ள 5 சதவீதத்தில் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் பெயரை சேர்க்க வேண்டும். இது தொடர்பாக பார்லியில் ஒருமித்த கருத்தை எட்டுவதும் அவசியம். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவ கீதத்தில் அவர் பயன்படுத்திய சில வார்த்தைகளையும், தேசிய கீதத்தில் இணைத்து மாற்றம் செய்யலாம். இவ்வாறு அக்கடிதத்தில் சுப்பிரமணியசுவாமி கூறியுள்ளார்.

-http://www.dinamalar.com

TAGS: