தீ விபத்திலிருந்து காப்பாற்றுவது எப்படி? அசால்ட்டாக கண்டுபிடித்த தமிழ் சிறுவன் (வீடியோ இணைப்பு)

jeyakumar_001தமிழ்நாட்டை சேர்ந்த 13 வயதான ஜெயக்குமார் என்ற சிறுவன் தீ விபத்திலிருந்து காப்பாற்றும் வகையில் மிக குறைந்த விலையில் கருவி ஒன்றை வடிவமைத்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டின் சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த போது பெண் ஒருவர், விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

இதனால் பாதிப்படைந்த பெண்ணின் மகன் ஜெயக்குமார், தீ விபத்து ஏற்பட்டால் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் மிக குறைந்த விலையில் கருவி ஒன்றை வடிவமைத்துள்ளார்.

இதுகுறித்து ஜெயக்குமார் கூறுகையில், முதலாளிகளின் கவனக்குறைவே விபத்திற்கு முதல் காரணம் என்றும், வெடிபொருட்களின் உராய்வு மூலமே பெரும்பாலும் விபத்து ஏற்படுகிறது எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்த கருவியில் இணைக்கப்பட்ட வெப்ப சென்சாரின் மூலம் அபாய எச்சரிக்கைகள் எழுப்பப்பட்டு, மோட்டார் உதவியுடன் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: