தமிழர்கள் தமிழ்நாட்டை ஆள வேண்டும்: சீமான்

seeman_26தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தனியாக போட்டியிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

திருச்சி பீமநகரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 268 பேர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம்தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

அனைத்து கட்சிகளும் தனி தனியே போட்டியிட வேண்டும். ஓட்டு வங்கி விகிதாச்சார அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும்.

எங்கள் கருத்துடன் ஒத்த கருத்துடையவர்கள் எங்களுடன் கூட்டணி சேரலாம்.

திராவிட கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம்.

தெலங்கானாவை தெலுங்கர்கள் ஆளும் போது தமிழர்கள் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என குரல் கொடுப்பதில் தவறில்லை.

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நாம் தமிழர் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும்.

இலவசங்கள் என்ற பெயரில் மக்களை அரசியல் கட்சியினர் ஏமாற்றக்கூடாது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்ற செயல்பாட்டு அறிக்கை வருகிற 20ம் திகதி வெளியிடப்படும்.

சுத்தமான குடிநீர், தரமான கல்வி, தரமான மருத்துவம் ஆகியவை தான் எங்களது கொள்கையாக எப்போதும் இருக்கும் என பேசியுள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: