சாதி மாறி காதலித்த சங்கரைக் கொலை செய்த கும்பலை பிடித்தது எப்படி? பொலிஸ் விளக்கம்

arrested_murderers_001உடுமலையில் காதல் திருமணம் முடித்த வாலிபரை கொன்ற கும்பல் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உடுமலையில் பட்டப்பகலில் நடுரோட்டில் தம்பதி மீது ஒரு கும்பல் சரமாரி அரிவாளால் வெட்டியதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கவுசல்யா படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியில் கொலைக் கும்பல் பதுங்கி இருப்பதாக உடுமலை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து உடுமலை காவல்துறையினருடன், திண்டுக்கல் காவல்துறை சிறப்பு படையினர் பட்டிவீரன்பட்டியில் உள்ள மணிகண்டன் என்பவர் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

அங்கிருந்து தப்பியோட முயற்சித்த கொலைக் கும்பலை சேர்ந்த செல்வக்குமார் (29), ஜெகதீசன் (30), மதன் (எ) மைக்கேல் (30), மணிகண்டன் (32), இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மணிகண்டன் (35) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், இவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் 5 கத்திகள் மற்றும் அரிவாள், ரூ.44 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

காவல்துறையினர் கூறுகையில், கவுசல்யாவின் தந்தை நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தவுடன், கொலைக் கும்பல் அந்த பகுதியில்தான் பதுங்கி உள்ளது என்பதை உணர்ந்தோம்.

எந்த இடம் என்பதை செல்போன் டவர் மூலம் நெருங்கினோம். பட்டிவீரன்பட்டியில் கொலையாளிகளின் படங்களை காட்டி நள்ளிரவில் மக்களிடம் கேட்டறிந்தோம்.

வீட்டை நெருங்கியதை அறிந்த அந்த கும்பல் தப்பியோடியது. நாங்கள் விரட்டிச் சென்று பிடித்தோம் என்று தெரிவித்துள்ளனர்.

-http://www.newindianews.com

சாதி மாறி திருமணம் செய்த நபர் கொலை! 5 பேர் அதிரடி கைது

TAGS: