ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு தலை துண்டிக்கப்பட்ட உடலின் படத்தை அனுப்பிய ஐஎஸ்

sri-sri-ravi-shankarஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு அமைதிச் செய்தி அனுப்பிய ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு, பதிலுக்கு தலை துண்டிக்கப்பட்ட உடல் ஒன்றின் படத்தை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் அனுப்பியுள்ளனர்.

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சமீபத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு அமைதிச் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில் பேச்சுவார்த்தை நடத்த தான் தயாராக இருப்பதாகவும், ஐஎஸ் அமைப்பு தீவிரவாதத்தைக் கைவிட்டு விட்டு அமைதிப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

அதற்குப் பதில் அனுப்பியுள்ள ஐ.எஸ் அமைப்பினர், தலை துண்டிக்கப்பட்ட உடல் ஒன்றின் படத்தை ரவிசங்கருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து அகர்தலாவில் செய்தியாளர்களிடம் ரவிசங்கர் கூறுகையில், ஐஎஸ் அமைப்புடன் அமைதிப் பேச்சு நடத்த நான் முயன்றேன்.

இதுதொடர்பாக ஒரு செய்தியையும் அனுப்பியிருந்தேன். ஆனால் அவர்களோ பதிலுக்கு துண்டிக்கப்பட்ட தலை ஒன்றின் புகைப்படத்தை அனுப்பியுள்ளனர். இதனால் எனது முயற்சி முடிந்து விட்டது.

அமைதிப் பேச்சுக்கு அவர்கள் தயாராக இல்லை என்று நான் நினைக்கிறேன். எனவே அவர்களை ராணுவரீதியாக மட்டுமே அடக்க முடியும் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் இயங்கிவரும் தீவிரவாத இயக்கங்கள் அரசுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி தங்களது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள முன்வர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: