பிரபாகரனுக்கும் வீரப்பனுக்கும் எந்த தொடர்பும் இல்லை: வீரப்பன் மனைவி பேட்டி

veerappanwifemuthulakshmiவீரப்பனின் வாழ்கை வரலாற்று படம் என்று எடுக்கப்பட்டுள்ள வில்லாதி வில்லன் திரைப்படத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

அப்படத்தின் இயக்குனார் ராம் கோபால் வர்மா, வீரப்பனின் உண்மையான வாழ்கை வரலாற்றை இந்தி மொழியில் படமாக எடுக்க தன்னிடம் உரிமைகேட்டு கையெழுத்து வாங்கினார்.

ஆனால், அதில் தமிழ் மொழிக்கான உரிமமும் அவருக்கு அளிப்பதாக குறிப்பிட்டிருந்தது எனக்கு தெரியாது. அவர் என்னை ஏமாற்றி உரிமத்தை பெற்றுக் கொண்டார்.

மேலும், இந்தியில் கில்லிங் வீரப்பன் என்ற தலைப்பில் படம் வெளியானது, நான் படத்தை பார்த்தேன், எனக்கு ஆங்கிலம் தெரியாது, அதனால் படத்தில் இடம்பெற்றிருந்த முக்கிய வசனங்கள் எனக்கு புரியவில்லை.

எனினும், தமிழில் படத்தை பார்த்தேன், அதில் பல தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் சந்தன மரம் கடத்தியபோது நான் அவருடன் இருந்தேன். பிரபாகரனுக்கும் எனது கணவருக்கும் தொடர்பு இருந்தது என்பது தவறான தகவல்.

எனது கணவர் வீரப்பன் பெயரை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க திரைப்படம் எடுத்து வருகின்றனர். இந்த திரைப்படத்தை யாரும் பார்க்க வேண்டாம் என கூறியுள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: