இந்திய மீனவர்கள் ஆறு பேர் கைது!

arrest-091அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஆறு இந்திய மீனவர்கள் இன்று மாலை புத்தளம் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் ராமேஸ்வரம் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் கற்பிட்டி அருகே இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் குறித்த மீனவர்களின் படகுகளை சோதனையிட்ட போது இந்தியமீனவர்கள் என்பது தெரியவர, அவர்களைக் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இவர்களின் படகுகளிலிருந்த 200 கிலோ எடைகொண்ட மீன்களும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செயயப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் என்பன புத்தளம் மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

-http://www.tamilwin.com

TAGS: