எல்லை தாக்குதலுக்கு செம பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்- 15 பாக். வீரர்கள் பலி!!

armyஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு ராணுவம் தக்க பதிலடியைக் கொடுத்துள்ளது. இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் 15 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 2 இந்திய வீரர்கள், எல்லை கிராமத்தைச் சேர்ந்த சிறுமி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் கண்மூடித்தனமான தாக்குதலால் எல்லையோர கிராம மக்கள் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எல்லை பாதுகாப்புப் படையினர் இன்று பதிலடி கொடுத்தனர். இந்த பதிலடியில் பாகிஸ்தானின் 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி அருண்குமார் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் முதலில் தாக்குதல் நடத்தியதால் நாம் திருப்பி பதிலடி கொடுக்க நேரிட்டது; பாகிஸ்தானைப் போல பொதுமக்களை இலக்கு வைத்து நாம் தாக்குதல் நடத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: