4 வயது சிறுமியை உயிர்ப்பலி கொடுத்த கும்பல்: அதிர வைக்கும் பின்னணி காரணம்

murder-blue-printஅசாம் மாநிலத்தில் தொலைந்த மொபைல் போனை மீட்டெடுப்பதற்காக கும்பல் ஒன்று 4 வயது சிறுமியை கழுத்தை துண்டித்து பலியிட்ட கொடூர சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தின் ரத்னாபூர் என்ற ஆதிவாசி கிராமத்தில் குறித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் இருந்து கைகள் துண்டிக்கப்பட்டு, தலை வெட்டப்பட்ட நிலையில் சிதைவுற்ற ஒரு உடல் கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் குறித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நரபலிக்கு இரையான சிறுமி சூனு கோட்பா கடந்த மாதம் 24 ஆம் திகதியில் இருந்து மாயமானதாக கூறி அவரது உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

ரத்னாபூர் கிராமத்தில் குடியிருந்து வரும் ஹனுமன் பூம்ஜி என்பவருக்கு சொந்தமான மொபைல் போன் ஒன்று திருடு போயுள்ளது. அந்த மொபைல் போனை மீட்டெடுக்கும் நோக்கில் அவர் பல வகையில் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் அவரது நண்பர் ஒருவர் அளித்த ஆலோசனையின் பேரில் கப்பார் சிங் என்ற மந்திரவாதியை அனுகி தங்களின் நிலை குறித்து விளக்கியுள்ளனர்.

மொபைலை மீட்டெடுக்க வேண்டும் என்றால் காளி தேவிக்கு உயிர்ப்பலி தர வேண்டும் என்றும் அதற்கு 4 வயது சிறுமி ஒருவர் தேவை என்றும் அந்த மந்திரவாதி கூறியுள்ளார்.

இதனையடுத்து பூம்ஜியின் பக்கத்து தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி சூனு கோட்பாவை கடத்தி சென்று நரபலி இட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய பூம்ஜி மற்றும் அவரது நண்பர் அலி என்பவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். நரபலி பூஜை மேற்கொண்ட மந்திரவாதி மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய இன்னொரு நபரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

தொலைந்து போன மொபைல் போனுக்காக சிறுமியை உயிருடன் பலியிட்ட சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-lankasri.com

TAGS: