விவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம்: கூட்டுறவு வங்கிகளுக்கு சங்க பதிவாளர் சுற்றறிக்கை

farmer2விவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம் என்று கூட்டுறவு வங்கிகளுக்கு சங்க பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சென்னை,

கூட்டுறவு சங்க பதிவாளர் ஞானசேகரன் கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- “கடன்களை திருப்பி செலுத்த முடியாத விவசாயிகளின் உடைமைகளை ஜப்தி செய்யக் கூடாது. கடன் வசூல் தொடர்பாக மறு உத்தரவு வரும் வரை, நோட்டீஸ் அனுப்புதல் போன்ற எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது.
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட குறுகிய கால கடன்கள், மத்திய கால கடன்களாக மாற்றப்பட்டுள்ளது.  கூட்டுறவு வங்கிகளில் கடன்பெற தகுதியுள்ள விவசாயிகளுக்கு அதிக அளவில் விவசாய கடன் வழங்க வேண்டும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

-dailythanthi.com

TAGS: