நடிகை பிரியங்காவுடன் நேரத்தை செலவிட்ட மோடி: சர்ச்சையாகும் புகைப்படம்

001அரசு முறை சுற்றுப் பயணமாக ஜேர்மனி சென்ற பிரதமர் மோடி நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்து பேசியது சர்ச்சையையும் ஆச்சிரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா, பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் 6 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று ஜேர்மனியில் நடிகையை சந்தித்து பேசியது மக்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமரை சந்தித்ததை மகிழ்ச்சியோடு பிரியங்கா சோப்ரா, தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். யதேர்ச்சையாக சந்திக்க நேரம் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாற்பது நாட்களாக டெல்லியில் போராடிய விவசாயிகளை சந்திக்க மறுத்ததும், நாடு முழுக்க மாட்டிறைச்சி தடை விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மோடி அதைபப்பற்றி கருத்து கூறாமல் நடிகையோடு உரையாடிக்கொண்டிருந்ததும், விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒருபக்க விமர்சனம் என்றால், பிரதமர் முன்னிலையில், கால் மேல் கால்போட்டு ஒரு பிரஜை அமர்வதா என்ற வாதமும் எழுந்துள்ளது.

-lankasri.com

TAGS: