இந்தியாவில் பயங்கரவாதி ஊடுருவல்

001புதுடில்லி : பாகிஸ்தானின் லக்ஷர் இ தொய் அமைப்பால் சிறப்பு பயிற்சி பெற்ற பயங்கரவாதி ஹசியா அனன் இந்தியாவிற்குள் ஊடுருவி இருப்பதாக புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.
பொது மக்கள் மற்றும் ராணுவ முகாம்களை தாக்குவதே இவனது இலக்கு.

ஸ்ரீநகர், விஜய்பூர் ரயில் நிலையம், சம்பா தொழில் துறை பகுதி, ஜம்மு பல் மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி, குர்தாஸ்பூர் இந்திய ராணுவ முகாம் மற்றும் பஞ்சாப்பின் தினாநகர் பகுதிகளில் தாக்குதல் நடத்த இவன் திட்டமிட்டுள்ளதாகவும் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.

இந்தியாவில் தாக்குதலை அரங்கேற்ற, இந்தியாவில் வசிக்கும் சில பயங்கரவாத அமைப்பினரின் உதவியுடன் இவன் இந்தியாவிற்குள் வந்திருப்பதாகவும் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

-dinamalar.com

TAGS: