குப்பை வண்டியில் பெண்ணின் உடல்: மருத்துவமனையில் அரங்கேறிய கொடூரம்

001இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இறந்த பெண்ணின் உடலை குப்பை வண்டியில் கொண்டு செல்லும் அதிர்ச்சி காட்சிகள் காணொளியாக வெளியாகி வைரலாகியுள்ளது.

பீகார் மாநிலத்தில் முசப்பர்பூர் மாவட்டத்தில் இயங்கி வருகிறது ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை.

இந்த மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி இறந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக குப்பை அள்ளும் வண்டியில் எடுத்து செல்லும் அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி குறித்த பெண்ணின் உடலை அதே குப்பை வண்டியில் எடுத்துச் சென்று மருத்துவமனை வளாகத்திலேயே மறைவு செய்யும் காட்சியும் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

இதனை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் பார்த்தாரா? இது போன்ற செயலுக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என சமூக வலைதளத்தில் பொதுமக்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.

-lankasri.com

TAGS: