10 ஆண்டுகளில் தூய்மையாகும் கங்கை:உமா பாரதி தகவல்

001பாரூக்காபாத்:கங்கையை முழுமையாக துாய்மையாக்க 10 ஆண்டுகள் ஆகும் என்று மத்திய அமைச்சர் உமா பாரதி கூறினார். அவ்வாறு கங்கையை சுத்தப்படுத்தும் பணியானது பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என்றும் அவர் கூறினார். கங்கை தசரா விழாவில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி கலந்து கொண்டார்.

பாதயாத்திரை

அவர் மேலும் கூறியதாவது:கங்கையை சுத்தப்படுத்தும் விதமாக,கங்கைக் கரையிலுள்ள தொழிற்சாலைகள் பிற இடங்களுக்கு மாற்றப்படும். இத்திட்டத்திற்கான முன்மாதிரி வரையப்பட்டுவிட்டன. தோல்பதனிடும் தொழிற்சாலைகளை கான்பூருக்கு மாற்ற உ.பி. அரசு முயற்சித்து வருகிறது. கங்கயை சுத்தப்படுத்தி அதன் தூய்மையை பராமரிப்பதற்காக ஒரு பாதயாத்திரையை கங்கோத்தியிலிருந்து கங்கா சாகர் வரையில்,தான் மேற்கொள்ளப் போவதாக அவர் கூறினார்.

-dinamalar.com

TAGS: