சீமான் மீது 4 பிரிவுகளில் பொலிசார் வழக்குப்பதிவு

seeman8-22பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தின் அஸ்தம்பட்டியில், தமிழ் தேசிய இன மக்கள் சந்திக்கும் சிக்கல்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் கடந்த 4ஆம் திகதி நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார்.

இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் இளைஞர்களைத் தூண்டும் விதமாகவும் சீமான் பொதுக் கூட்டத்தில் பேசியதாக அங்கு பாதுகாப்புக்கு வந்த பொலிசார் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து, சேலம் காவல் துறை ஆணையரின் உத்தரவின் பேரில் சீமான் மீது அஸ்தம்பட்டி பொலிசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

-lankasri.com

TAGS: