ரோட்டில் கிடந்த 60 பவுன் நகை: நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

கோயம்புத்தூரில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சாலையில் கண்டெடுத்த 60 பவுன் நகையை பொலிசில் ஒப்படைத்துள்ள செயல் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் டி.பி ரோடு பகுதியில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முனுசாமி என்பவர் இன்று காலை சாலையில் கண்டெடுத்த 60 பவுன் நகையை பொலிசில் ஒப்படைத்துள்ளார்.

கோவை கமிஷனர் அமல்ராஜ், முனுசாமியை நேரில் அழைத்துப் பாராட்டியதோடு, 1,000 ரூபாய் ரிவார்டு கொடுத்து பெருமைப்படுத்தியுள்ளார்.

100-க்கும் 200-க்கும் கஷ்டப்படுறவன். எனக்கு காசோட அருமை தெரியும்.

அதைச் சம்பாதிக்கிறதுக்கு படுற கஷ்டமும் தெரியும் அதனால் தான் இவ்வளவு நேர்மையாக இருக்கிறேன் என்று முனுசாமி கூறியுள்ளார்.

அந்த நகைககள், ஒரு நகைக்கடைக்காரருக்குச் சொந்தமான நகை என்பதும், வங்கியின் லாக்கரில் வைக்கச் செல்லும் வழியில் கீழே தவறவிட்டிருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது.

-lankasri.com

TAGS: