இந்தியாவில் 59 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை

farmer1இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியர்களை கலங்கடிக்கும் இந்த ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்தியுள்ளது. இதில் அதிக வெப்பநிலை, குறைந்த மழை அளவு போன்ற தட்ப வெப்பநிலை மாற்றங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியாவின் தெற்குப் பகுதியில் இந்த தற்கொலைகளும், காலநிலை மாற்றமும் நடந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும், இந்த ஆய்வில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் காலநிலை மாற்றத்தால் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் விவசாய உற்பத்தி அதிகளவில் நடக்கும் காலங்களில் வெப்பநிலை அதிகரிப்பு, மழை இல்லாமல் போனதால் ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளது.

இதே நிலை தொடர்ந்தால் உயிரிழப்புகளும் அதிகரிக்கும் என இந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

-lankasri.com

TAGS: