காஷ்மீர் பிராந்திய லஷ்கர்-இ-தொய்பா தளபதியை சுட்டு கொன்றது இந்திய ராணுவம்

Kashmir-Mapஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள காக்போரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தளபதி அயூப் லெலாரி சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்திற்கு கிடைத்த தகவலையடுத்து நடந்த அதிரடி தாக்குதலில் லெலாரி கொல்லப்பட்டான்.

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவன் யாசீன் யாட்டூ சமீபத்தில் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், லஷ்கர் அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டுள்ளது முக்கியத்துவமானது.

-oneindia.com

TAGS: