டாஸ்மாக்கை மூடுங்கள்.. முதல்வருக்கு உருக்கமான கடிதம் எழுதி விட்டு மாணவர் தற்கொலை

நெல்லை: டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி நெல்லையில் தினேஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். அவர் முதல்வருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலியின் தெற்கு புறவழிச்சாலை பகுதியில் வசிப்பவர் தினேஷ். 12ம் வகுப்பு படிக்கும் மாணவரான இவரின் தந்தை, கடந்த சில வருடங்களாக மோசமான குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் தினேஷ் வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் அவர்களின் குடும்பமும் வறுமையில் கஷ்டப்பட்டள்ளது. அதோடு தினேஷ் சரியாக படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் இன்று திருநெல்வேலியின் தெற்கு புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கு முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். கடிதத்தில் தந்தையின் மதுபழக்கத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன், தயவு செய்து டாஸ்மாக்கை மூடுங்கள் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்து இருக்கிறார்.

-tamil.oneindia.com

TAGS: