வட இந்தியாவில் புயல், இடி மின்னல் தாக்கி 50 பேர் பலி

வட இந்தியாவில் பலத்த புயல் மற்றும் இடி மின்னல் தாக்கி சுமார் 50 பேர் இறந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் செவ்வாய் இரவு வீசிய புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் சுமார் 15 பேர் இறந்துள்ளனர். பிகாரிலும் இதே காரணத்தால் 20 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புயல், மின்னல் மற்றும் மின்கம்பி அறுந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர். உத்தராகண்ட் மாநிலத்தில் புயலால் மரம் சரிந்து விழுந்து மூன்று குழந்தைகள் பலியாகினர். -BBC_Tamil

 

TAGS: