சிங்களனை விடுங்க.. இதைப் பாருங்க.. ஆந்திர மீனவர்கள் வெறித்தாக்குதல்.. 10 நாகை மீனவர்கள் காயம்!

சென்னை: தமிழக மீனவர்கள் மீது ஆந்திர மீனவர்கள் நடத்திய கொலை வெறித் தாக்குதலில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வருவதாக கூறி இலங்கை கடற்படையும் அந்நாட்டு மீனவர்களும்தான் அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்துவதும் கைது செய்வதும் வழக்கம்.

இந்நிலையில் அண்டை மாநிலமான ஆந்திர மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஆந்திர மீனவர்கள் நடத்திய தாக்குதலில் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த 10 மீனவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

-tamil.oneindia.com

TAGS: