மாவோக்கள் வெறிச்செயல் : தெலுங்குதேச எம்எல்ஏ சுட்டுக்கொலை

அமராவதி : ஆந்திர மாநிலம், அரகு தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ., சர்வேஸ்வர ராவ் மற்றும் அவருடன் சென்ற 2 பேர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

விசாகப்பட்டினம் அருகே தும்பிரிகுண்டா பகுதியில் காரில் வந்த எம்எல்ஏ சர்வேஸ்வர ராவ், முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா மற்றும் ஒருவரையும் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

-dinamalar.com

TAGS: