குடியிருப்பு பகுதியில் சர்வசாதாரணமாக வலம் வரும் கரடி!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பகலிலும், இரவிலும் நடமாடும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வண்ணாரப்பேட்டை பகுதியில் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் கரடியை மக்கள் கண்டதாக புகார் கூறிவந்தனர். இந்நிலையில் அப்பகுதி வீடுகளில் வைத்திருந்த Cctv கேமராவை பரிசோதனை செய்தபோது கரடி ஒன்று நேற்று காலையில் குடியிருப்பு பகுதியில் நடந்து வருவதும் வேகமாக ஓடிச்செல்வதும் பதிவாகியுள்ளது.

மீண்டும் அந்தக் கரடி இரவிலும் நடமாடி வந்ததும் பதிவாகி இருந்தது இதனைக்கண்ட அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து கரடியை கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

-athirvu.in

TAGS: