கருவில் உள்ள குழந்தைகளின் பாலினத்தை தெரிவித்த 3 மருத்துவர்களுக்கு தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், கருவில் உள்ள குழந்தைகளின் பாலினத்தை தெரிவித்த 3 மருத்துவர்களுக்கு தலா 3 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்துகொண்டு பெண் குழந்தையாக இருந்தால் அதனை கருவிலேயே அழிக்கும் வழக்கம் சில இடங்களில் பரவியதால் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவிப்பதை குற்றமாக அறிவித்து சட்டம் 1994ல் இயற்றப்பட்டது.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பேட்டி பச்சாவோ சமிதி (Beti Bachao Samiti) என்ற அமைப்பு குவாலியரில் கருவில் உள்ள குழந்தையின் செயல்பாட்டை அறிவிக்கும் மருத்துவர்களை கண்டுபிடிக்க ஸ்டிங் ஆபரேஷன் ஒன்றை நடத்திய போது மருத்துர்கள் சுஷாமா திரிவேதி, எஸ்.கே.ஸ்ரீவத்சவா, சந்தியா திவாரி ஆகியோர் தலா 2500 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை பெற்றுக்கொண்டு குழந்தைகளி பாலினத்தை தெரிவித்து வந்ததது தெரியவந்தது.

இதுதொடர்பான வழக்கு குவாலியரில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்று வந்த நிலையில் மூவருக்கும் 3 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

-athirvu.in

TAGS: