தைவான் நிறுவனம் தமிழகத்தில் தொழில் தொடங்க முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தித் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தைவான் நாட்டைச் சார்ந்த ஹாங் ஃபூ தொழில் குழுமம்  தமிழ்நாட்டில் தொழில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது

இதன்மூலம், அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில், படிப்படியாக 1000 கோடி ரூபாய் வரை முதலீடு மற்றும் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

இத்தொழில் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.  இந்த முதலீடு தமிழ்நாட்டில் காலணிகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.

தைவான் நிறுவனம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இடம் தேர்வு செய்யப்பட்ட பிறகு, விரைவில் தொழிற்சாலை தொடங்கும் பணிகள் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர்  இறையன்பு, உள்பட அரசுதுறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Malaimalar