வேடந்தாங்கல் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்- சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்தது

தமிழகத்தில் மிக முக்கியமான பறவைகள் சரணாலயத்தில் ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இங்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜூலை மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து மீண்டும் தங்களது சொந்த நாடுகளுக்கு செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு மலேசியா, பாகிஸ்தான், மியான்மர், ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, கனடா, நேபாளம், அந்தமான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல வகை பறவைகள் வர்ணநாரை, ஊசிவால் வாத்து, சாம்பல் நிற கூழாகடா, தண்டை வாயான், பாம்பு புத்திரா, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், புள்ளி வாத்து, தரை குருவி, கூழைக்கடா, சாம்பல் நாரை உள்ளிட்ட பலவகையான வெளிநாட்டு பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வந்துள்ளன.

வேடந்தாங்கல் ஏரிக்கரையில் மூங்கில் மரம், கடப்ப மரம் போன்றவை அதிகமாக உள்ளதால் பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்கும் கூடு கட்டி குஞ்சு பொரிக்கவும் ஏதுவாக உள்ளது. இந்த ஆண்டு வெளிநாட்டு பறவைகளின் வருகையையடுத்து சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.

பெரியவர்களுக்கு ரூ.10, சிறுவர்களுக்கு ரூ.5, கேமரா வாடகை ரூ.50 என வசூலிக்கப்படுகிறது. மேலும் வனத்துறைக்கு வனத்துறை சார்பில் ஏரிக்கரை மேல் தொலைதூர பறவைகளை பார்ப்பதற்கு கேமரா வசதி, கழிவறை வசதிகள் குடிநீர் வசதிகள் வனத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வனசரக அலுவலர் ரூபஸ் லெஸ்லி ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

-mm