இராணுவத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: விக்னேஸ்வரன்

வடமாகாண சபையின் முதலாவது அமர்வு இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25, 2013) முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணம் கைதடியில் புதிதாக கட்டப்பட்டு வருகின்ற இருமாடிக் கட்டிடத்தின் தளப்பகுதியில் நடந்தது. முன்னதாக வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருவரும் இணைந்து புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர். இதனையடுத்து சபையின்…

பிபிசியின் செய்திகளை மறுக்கிறது இலங்கை இராணுவம்

இலங்கையில் விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளிகள் இராணுவத்தினரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும் பாலியல் வல்லுறவு அச்சுறுத்தல்களை அவர்கள் எதிர்நோக்கியிருப்பதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை இராணுவம் வழமைபோல மறுத்துள்ளது. அண்மையில் இலங்கைக்கு நேரடியாகச் சென்றிருந்த பிபிசியின் செய்தியாளர் ஃபர்கல் கீன் நேற்று முன்தினம் வெளியிட்ட தொலைக்காட்சி செய்திப் பெட்டகத்தில்…

பிபிஸி வெளியிட்டுள்ள செய்தியால் இலங்கை அரசு கடுப்பில்…!- திவயின தகவல்…

இலங்கை  தொடர்பில் பி.பி.ஸி யில் ஒளிபரப்பான செய்தி ஒன்று குறித்து  கடுப்பாகியுள்ள இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கில் தமிழ் பெண்கள் படையினரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்வது தொடர்பில் தமிழ் பெண்ணொருவர் தெரிவித்திருந்த கருத்தொன்றினை பி.பி.ஸி ஒலிபரப்பியிருந்தமை தொடர்பிலேயே இந்த…

நாவற்குழி காணிப்பிரச்சினை தொடர்பில் நீதிமன்றத்தை நாடப்போவதாக வடக்கு முதலமைச்சர் அறிவிப்பு!

யாழ்ப்பாணம் நாவற்குழியில் இராணுவம் சிங்களவர்களுக்கு காணிகளை பகிரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக வடக்கு முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாவற்குழியில் குடியேற்றப்பட்டுள்ள சிங்களவர்களுக்கு இராணுவம் காணிகளை பகிர்ந்தளித்துள்ளது. இதனை மறைப்பதற்காக தமிழர்களுக்கும் காணிகளை பகிர்ந்தளிப்பதாக இராணுவத்தினர் கூறியுள்ளனர். இந்தநிலையில் காணிப்பகிர்வில் இராணுவத்தினர் ஈடுபடுவது சட்டத்துக்கு…

எழிலன் பற்றிய வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடக்கும்

இலங்கை அரசாங்கத்தின் உத்தரவாதத்தையடுத்து இராணுவத்தினரிடம் சரணடைந்து,பின்னர் தகவல்கள் ஏதும் தெரியாதுள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உட்பட 5 பேர் தொடர்பான விசாரணைகள் வரும் டிசம்பர் மாதம் 2ஆம் 3 ஆம் திகதிகளில் நடைபெறும் என முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அறிவித்திருக்கின்றது. வவுனியா…

மாவீரர்கள் சிங்களத்திற்கு பயங்கரவாதிகள்! எமக்கு அவர்கள் போராடிய பிள்ளைகள்: சுரேஸ்…

எமது விடுதலைக்காக போராடிய மாவீரர்களை நினைப்பதற்கும் மதிப்பதற்கும் எமக்கும் உரிமை உண்டு. யாரும் தடைவிதிக்க முடியாது! தென்னிலங்கைக்கு எமது விடுதலைக்காக போராடியவர்கள் பயங்கரவாதிகள், ஆனால் எமக்கு அவர்கள் விடுதலைக்காக போராடிய எமது பிள்ளைகள். என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன்.. எமது…

பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் மீது தாக்குதல்

மாத்தளை மாவட்டம் தம்புள்ள நகரப் பிரதேசத்திலுள்ள பத்திரகாளி அம்மன் ஆலயம் மீண்டும் அடையாளம் தெரியாத ஆட்களின் தாக்கப்பட்டுள்ளதாக அங்கு வசிக்கும் தமிழர்களினால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் நபர்களினால் நேற்றிரவு ஆலயத்தின் கூரை அகற்றப்பட்டதோடு, ஆலயத்தின் முன்பாக பறக்கவிடப்பட்டிருந்த நந்திக் கொடியும்…

கிளிநொச்சியில் கட்டாயக் கருத்தடை குறித்து குற்றச்சாட்டு

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று கிராமங்களைச் சேர்ந்த கணிசமான தமிழ் பெண்களுக்கு அவர்களது விருப்பத்துக்கு மாறாக கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டதாக யாழ் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்த ஆணையத்தின் தலைவரான அருட்தந்தை மங்களராஜா அவர்கள் வத்திக்கானின் இலங்கைக்கான பிரதிநிதி டாக்டர். ஜோசப் ஸ்பிட்டரி…

நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு: வடமாகாண சபைக்கு…

2014 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2014 ஆம் ஆண்டில் அரச செலவீனம் 1542 பில்லியன் ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் அதிகூடிய செலவீனமாக தேசிய பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி…

இலங்கை மாநாட்டுக்கு செல்ல வேண்டாம்!– பிரித்தானிய பிரதமருக்கு தொழில் கட்சி…

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்குமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கை உரிய நடவடிக்கை எடுக்காததை கருத்திற் கொண்டும், இலங்கையில் மோசமடைந்து வரும் அரசியல் நிலைமையை கருத்திற் கொண்டும் பிரித்தானிய பிரதமர் மாநாட்டை புறக்கணிக்க…

தமிழினத்தின் உணர்வுகளுடன் விளையாடுவதே சிங்களத்தின் பொழுதுபோக்காகிவிட்டது!– கோவிந்தன் கருணாகரம்

தமிழினத்தின் உணர்வுகளுடன் விளையாடுவதே சிங்களத்தின் பொழுதுபோக்காகி விட்டது. துட்டகைமுனு மன்னனுக்கிருந்த மனிதாபிமானம்கூட மகிந்த அரசிடம் காணமுடியாததுதான் இங்கு முரண்நகை என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார். மாவீரர் துயிலும் இல்லங்கள் குறித்து ஏற்பட்டுள்ள சர்ச்சையான நிலைமை குறித்து வெளியிட்டுள்ள…

கைகளை உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யும் முறையை கண்டுபிடித்த இலங்கை…

விபத்துக்களின் போது கைகளை இழக்கும் நபர்களுக்கு உறுப்பு மாற்று அடிப்படையில் அறுவைசிகிச்சை மேற்கொண்டு கைகளை பொருத்தும் அதி நவீன முறை ஒன்றை இலங்கை விஞ்ஞானி ஒருவர் கண்டு பிடித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் குறித்த இலங்கை விஞ்ஞானி இந்த ஆய்வினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார். வைத்திய கலாநிதி துசித ஜயமான என்ற மருத்துவ…

கொழும்பின் பொதுநலவாய மாநாட்டை கென்யா புறக்கணிக்கிறது!

இலங்கையில் எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணி;க்கவேண்டும் என்று கென்யா ஆபிரிக்க நாடுகளிடம் கோரிக்கை விடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜதந்திர தரப்புக்களை சுட்டிக்காட்டி கென்யாவின் தெ ஸ்டார் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. எனினும் ஏற்கனவே உகண்டாää தான்சானியாää றுவண்டாää நைஜீரியாää தென்னாபிரிக்கா மற்றும் ஸம்பியா…

போரில் இறந்தவர்களை நினைவுகூர்தல் விஷயத்தில் சர்ச்சை

இலங்கையில் யுத்தத்தினால் இறந்தவர்கள் மற்றும் யுத்த மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப்புலி அமைப்பைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் நினைவுகூர்வது தொடர்பில் சாவகச்சேரி மற்றும் கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி ஆகிய பிரதேச சபைகள் மேற்கொண்டுள்ள தீர்மானங்கள் இராணுவத்தின் நெருக்கடியை அதிகரிக்கச் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாகவே மாவீரர்கள் உட்பட…

முதலமைச்சர் விக்னேஸ்வரனை பொதுநலவாய மாநாட்டில் உரையாற்ற அழைப்பது குறித்து ஆலோசனை!

பொதுநலவாய மாநாட்டில், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் அளிப்பது குறித்து, இலங்கை அரசாங்கம் உள்ளக கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உயர்மட்டத் தலைவர்களின் கூட்டத்திலே, வடக்கு மாகாண முதல்வரை கொமன்வெல்த் மாநாட்டில் பொருத்தமான…

இலங்­கையில் வலுப்­பெறும் இரட்டை அதி­கார மையம்

தனது இரா­ஜ­தந்­திர நகர்­வுகள் மூலம், இலங்­கையில் இரட்டை அதி­கார மையங்­களை உரு­வாக்க இந்­தியா முயற்­சிப்­ப­தாக, அண்­மையில் ஜாதிக ஹெல உறு­மய குற்­றம் ­சாட்­டி­யி­ருந்­தது நினை­வி­ருக்­கலாம். இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் இந்த இரட்டை அதி­கார மையப் போக்கு புதி­தாகத் தோன்­றிய ஒன்றல்ல. ஆனால், ஜாதிக ஹெல உறு­ம­ய­வுக்கு இது புதி­தாகத் தெரியத்…

காணாமல் போனோர் விவகாரம்! ஜனாதிபதி ஆணைக்குழுவில் நம்பிக்கை இழந்துள்ள மக்கள்!

இலங்கையில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக கடந்த மாதம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவுக்கு விபரங்களை வழங்கி உதவும் வகையில் மன்னார் பிரஜைகள் குழுவினர் வடமாகாணத்தில் தகவல்களைத் திரட்டி வருகின்றனர். காணாமல் போனவர்கள் தொடர்பில் ஜனாதிபதி நியமித்துள்ள ஆணைக்குழு பற்றி பொதுமக்கள் கவனமில்லாமல் இருந்து விடக்கூடும், இந்தச் சந்தர்ப்பத்தைத்…

இந்திய மீனவர்களின் அத்துமீறல்: யாழில் உடனடியான கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறுவதை தடுக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் அவசரக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடமே ஜனாதிபதி இந்த பணிப்புரையினை விடுத்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமக்கு கீழ் வரும் அமைச்சுக்களின் பொறுப்புக்களுக்காக ஜனாதிபதியின் முன்னால் பதவிப்…

புலி அர­சி­யலின் நீட்­சியும் உணர்­வு­பூர்­வ­மான அர­சி­யலும்!

'புலிகள் அர­சி­யலின் தொடர்ச்சி', 'உணர்ச்சி வசப்­பட்ட அர­சியல்' என்­கிற சொல்­லா­டல்கள், எதற்­காக இப்­போது அதி­க­மாகப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது?. அது மட்­டு­மல்­லாது 'பூகோள அர­சியல்', 'பிராந்­திய அர­சி­யலில் சீனாவின் ஆதிக்கம்' போன்ற பெரிய விட­யங்­களும் இத­னோடு இணைத்தே பேசப்­ப­டு­கி­றது. இந்த இரண்டு உள், வெளி அர­சி­ய­லுக்­கி­டையே, பொருத்­தப்­பா­டான நுண்­ண­ர­சியல் அநே­க­மாகக் காணப்­ப­டு­வ­தில்லை.…

கிளிநொச்சியில் பௌத்த தூபியை திறந்து வைத்தார் கோத்தபாய!

தமிழர் பகுதிகளில் பௌத்த மேலாதிக்கத்தின் மற்றுமொரு குறியீடாக கிளிநொச்சியில் பெளத்த தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க ஆகியோரால் இத்தூபி திறந்து வைக்கப்பட்டது. மாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள இத்தூபி, கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தில் முழு ஆதரவோடு…

சிங்கள மக்களை வெளியேற்ற சிறிதரனுக்கு அனுமதியளிக்கப்பட மாட்டாது!

சிங்கள மக்களை வெளியேற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு அனுமதியளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிங்களப் பத்திரிகையொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. அந்தப் பத்திரிகை செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாவற்குழியில் தங்கியுள்ள 136 சிங்கள குடும்பங்களை விரட்டியடிக்க சிறிதரன் முயற்சிக்கின்றார். இந்த முயற்சிக்கு இடமளிக்கப்பட…

இலங்கை தமிழர்கள் பாதுகாக்கப்படுவது அவசியம்!- சென்னையில் நரேந்திர மோடி பேச்சு

இலங்கை தமிழர்கள் போன்று பல்வேறு நாடுகளில் துன்பப்படும் இந்திய வம்சாவளிகள் பாதுகாக்கப்படல் அவசியம் என்று பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் இந்தியா பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு மத்திய அரசின்…

மாவீரர் துயிலும் இல்லங்கள் மீளமைக்க கோரி பிரேரணை கொண்டுவந்த பிரதேச…

மாவீரர் துயிலும் இல்லங்கள் மீளமைக்கப்பட வேண்டும். போரில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வழிசமைத்து தரவேண்டும் எனக் கோரி பிரேரணை கொண்டுவந்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மீளமைக்கப்பட வேண்டும் என சாவகச்சேரி பிரதேச சபையினால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட…