விடுதலைப் போராட்டத்தை மறந்து விடுங்கள்: புலிகளின் மூத்த தளபதி ராம்…

ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் தொடர்பான அனைத்து விடயங்களையும் மறந்துவிட்டு சமூகத்துடன் இணைந்து இயல்பு வாழ்க்கை மேற்கொள்ள முன்வருமாறு புலிகளின் மூத்த தளபதி ராம் அறிவுரை கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண மூத்த தளபதியாக இருந்த ராம், மட்டக்களப்பு வெல்லாவெளியில் இருக்கும் தனது தாயாரைச் சந்திப்பதற்காக அண்மையில்…

மைதானத்தில் முளைத்த புத்தர் சிலையால் சர்ச்சை

மட்டக்களப்பு ஒட்டமாவடி பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பாடசாலையொன்றின் விளையாட்டு மைதானத்தின் நடுவில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பிரதேச முஸ்லிம்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. முழுமையாக முஸ்லிம்கள் மட்டும் வாழும் இப்பிரதேசத்திலுள்ள பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்திலே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வேளையில் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.…

புலிகளின் முன்னாள் தளபதிகள் ராம் மற்றும் நகுலன் வடமாகாண சபைத்…

விடுதலைப் புலிகளின் முன்னாள் மூத்த தளபதிகளில் இருவரான ராம் மற்றும் நகுலன் இருவரும் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராம் மற்றும் நகுலன் இருவரும் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண மூத்த தளபதிகளாக இருந்ததுடன், அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிகுடிச்சாறு பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து…

விடுதலைப் புலிகள் மீதான தடை செல்லும்: சென்னை நீதிமன்றம்

இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடை 2010 ஆம் ஆண்டு நீட்டிக்கப்பட்டது செல்லும் எனறு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் 1991ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அதன் பின்னர், இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை அத்தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2010ஆம் ஆண்டு…

விவசாயிகள் தாக்கப்பட்டதற்கு எதிராக மட்டக்களப்பு கிரானில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து இன்று கிரான் சந்தியில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்பாட்டப் பேரணியில் பெண்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். களுவாமடு எனுமிடத்தில் கடந்த…

நவநீதம் பிள்ளை BBC நிகழ்சியில் இலங்கைக்கு மீண்டும் அடி!

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை, இலங்கை மேல் மீண்டும் கடுமையான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். நேற்று  முந்தினம்(28) BBC நிகழ்ச்சி ஒன்றில் அவர் மக்களுடைய கேள்விக்கு பதிலளித்தார். பல உலக நாட்டு விடையங்கள் இங்கே பேசப்பட்டது. இருப்பினும் முக்கியமான இடத்தைப் பிடித்த விடையம் இலங்கையாகவே இருந்தது. இலங்கையின்…

13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வினை மக்கள்…

13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான எந்தவொரு அரசியல் தீர்வினையும் தமிழ் மக்கள் நிராகரிக்கின்றனர் - இலங்கை தீவில்  இன முரண்பாட்டுக்கான அடிப்படை காரணிகளை நிவர்த்தி செய்யவோ அன்றி தமிழ் தேசிய அபிலாசைகளை பாதுகாக்கவோ இது தவறுகிறது. ஒற்றையாட்சிக்குரிய மத்திய வடிவமைப்புக்குள் நிறுவப்பட்டுள்ள 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச்…

கொடுத்த வாக்குறுதிகளை மீறுகிறது இலங்கை அரசு

இலங்கை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை மீறி செயல்பட்டு வருவதாலேயே நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபெறாது என்று அதன் உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை அரசியல் சாசனத்தில் சில திருத்தங்களை கொண்டுவரும் நோக்கில் அரசு நாடாளுமன்றத் தேர்வுக் குழு ஒன்றை அமைத்துள்ளது. அதில் பிரதான எதிர்கட்சியான…

இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே இலங்கை அடக்கி வாசிக்கிறது

இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே இலங்கையில் மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைப்பதற்கான அரசின் முயற்சிகள் தாமதமடைந்துவருவதாக இந்திய இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரி கர்ணல் ஹரிகரன் தெரிவிக்கிறார். வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக, மாகாணசபை அதிகாரங்களைக் குறைக்கும் விதத்தில் அரசியலமைப்புத் திருத்தங்களைக் கொண்டுவர இலங்கை அரசாங்கம் முயற்சித்தபோதே, இந்திய அரசின் தலையீடு காரணமாக…

மணலாறில் சிங்கள குடியிருப்புகள்: ஆயிரக்கணக்கில் இராணுவம் குடியேற்றம்!

வட-கிழக்கு மாகாணத்தின் இதய பூமியான மணலாறில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை குடியமர்த்தி, புதிய சிங்களக் குடியிருப்புகளை உருவாக்கும் முயற்சியில் அரசாங்கம் மீண்டும் ஈடுபட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில், மணலாறு பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை, ரணவிரு பியச சம்பத்நுவர என்ற இராணுவத்தினருக்கான மாதிரிக் குடியேற்றக் கிராமத்தை உருவாக்குவதற்காக காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இங்கு இராணுவத்தினரின்…

பாகிஸ்தானுடன் நட்பை வலுப்படுத்தி இந்தியாவுக்கு பாடம் கற்பிக்க இலங்கை இராணுவம்…

இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை அடுத்து, பாகிஸ்தானில் அதற்கான கூடுதல் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் இரு தரப்பு இராணுவ தளபதிகளும் கலந்துரையாடியுள்ளனர். பாகிஸ்தான் இராணுவத் தளபதி அஷ்பாக் பர்வேஷ் கயானி தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது அவர் பாதுகாப்பு செயலாளர் மற்றும்…

இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை! ஆகஸ்ட் 25ல் இலங்கை…

இலங்கைக்கு தாம் எதிர்வரும் ஆகஸ்ட் 25 ம் திகதியன்று பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர் மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்…

சிங்கள ராவயவிடம் அடிபணிந்தார் ஜனாதிபதி – மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு…

மதமாற்றத் தடைச்சட்டத்தை மிக விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கள ராவய அமைப்பின் பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார். பசுவதை தடுப்புச் சட்டத்தை வலியுறுத்தி ஹம்பாந்தோட்டை முதல் கொழும்பு வரை பாதயாத்திரை மேற்கொண்ட சிங்கள ராவய பிரதிநிதிகளை அலரி மாளிகைக்கு வரவழைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பொன்றை…

புலிகள் பாவித்த தனித் தீவுக்கு மகிந்தர் இன்று பயணமானார் !

இன்று காலை(இலங்கை நேரப்படி) மகிந்தர் தன்சானியா நாடு மற்றும் சீஷெல் தீவுக்கும் பயணமாகியுள்ளார். தன்சானியா என்னும் நாடு பற்றி அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் சீஷெல்லா ? அப்படி ஒரு நாடு இருக்கிறதா என்று பலர் வியப்படைவார்கள். இந்துமா கடலில் இலங்கைக்கு கீழ் புறமாக மலதீவுகள் உள்ளது அங்கிருந்து ஆபிரிக்கா…

உரப் பற்றாக்குறை : கவலையில் இலங்கை விவசாயிகள்

இலங்கையில் உரத்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறுகின்றார்கள். உரத்தின் விலை அதிகரித்ததையடுத்து, அரசாங்கம் மானிய விலையில் விவசாய சேவை நிலையங்களின் ஊடாக உரத்தை விவசாயிகளுக்கு விநியோகித்து வருகின்றது. ஆயினும், இவ்வாறு வழங்கப்படுகின்ற உரத்தின் அளவும் படிப்படியாகக் குறைக்கப்பட்டிருப்பதாக வவுனியா வடக்கு ஒருங்கிணைந்த மாதிரி…

முன்னாள் மூத்த புலி போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்…

விடுதலைப் புலிகளின் மூத்த போராளியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வடமராட்சியின் இமையாணன் பகுதியினில் வெற்று பனங்காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது. 49 வயதுடைய சித்திரன் கந்தசாமி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். லம்போ என்றழைக்கப்படும் குறித்த போராளி சுமார்…

சரத் பொன்சேகாவின் உரிமைகளை மீண்டும் வழங்க ராஜபக்ச ஆலோசனை

ஜனநாயக கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவின் உரிமைகளை மீண்டும் வழங்குவது தொடர்பில் மஹிந்த ராஜபக்ச அதிக கவனம் செலுத்தி வருகிறார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. கடந்த வருடம் மே மாதம் 21ம் திகதி சரத் பொன்சேகா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட போது, அவரது வாக்குரிமை…

நாளை மலரும் தமிழீழத்தில் முஸ்லிம் மக்களின் உரிமைகள்: பிரதமர் உருத்திரகுமாரன்…

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் கடந்த மே 18ம் நாள் முரசறையப்பட்டிருந்த தமிழீழ சுதந்திர சாசனத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் உரிமைகள் தொடர்பிலான விடயங்கள் பல்வேறு முஸ்லிம் பிரதிநிதிகளினால் வரவேற்கப்பட்டுள்ளது. முரசறையப்பட்டிருந்த தமிழீழ சுதந்திர சாசனத்தில் நிலைப்பாடுகள் தொடர்பிலான வரைவின் 10வது சரத்தில் 'தமிழீழத்தில் வாழும்…

தமிழினி விடுதலை

விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி புதனன்று காலை வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வுப் பயிற்சி மையத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் பின்னர் வன்னியில் இருந்து மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தனது…

லண்டனில் பேரெழுச்சியுடன் இடம்பெற்ற தமிழீழ மாணவர் எழுச்சி நாள் !

பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு, ஒருங்கிணைப்பில் ஞாயிறு 23 அம் திகதி அன்று பொன் சிவகுமாரன் அண்ணாவின் 39 அவது நினைவு நாளையொட்டி  இல 10 பிரித்தானிய பிரதமரின் வாசல்தலத்திற்கு வெளியில் நடந்த நிகழ்வஞ்சலியிலும் போராட்டத்திலும் நூற்றுக்கணக்கான மாணவர்களும் மக்களும் கலந்து கொண்டனர். தமிழ் மக்கள் மீது இலங்கை…

மாகாணசபை முறையை மாற்ற இடமளிக்கப் போவதில்லை

இலங்கையில் மாகாணசபை முறையை மாற்ற இடமளிக்கப் போவதில்லை என்று அரசாங்க அமைச்சர்கள் சிலர் சூளுரைத்துள்ளனர். அவர்கள் கொழும்பில் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர்கள் மாகாணசபை முறையை மாற்றியமைக்கும் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தத்துக்காகவும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அரசாங்கத்துக்கு வழங்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.…

புலம்பெயர் தமிழர்களும் தமிழக அரசியல்வாதிகளுமே குழப்பத்திற்கு காரணம் -தயா மாஸ்தர்

இலங்கையில் மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தமிழ் மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாக அரசாங்க தரப்பினருக்கு தெரியப்படுத்தியதாக விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் கூறுகிறார். வட- மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தபோது, தாம் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக…

பொது பல சேனாவுக்கு எதிராக தென்னிலங்கை கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் தெற்கே, களுத்துறையில் மக்கொனை என்ற இடத்தில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பௌத்த கடும்போக்கு அமைப்பான பொது பல சேனாவுக்கு எதிராக இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மக்கோனை லக்கல குமார கந்தையிலுள்ள தேவாலயத்துக்குரிய மாதா திருச்சொரூபத்திற்கு முன்னால் இருந்த சந்திரவட்டக்கல் வடிவத்திலான வாசற்படியை இரண்டு தினங்களுக்கு…