அடுத்தடுத்து குளறுபடிகள், அது தான் பிஎன் பாணி

"நம்ப முடியாத திருப்பங்களுடன் அந்தக் கதை மேலும் மோசமடைகின்றது. வழக்கம் போல போலீஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது" Psy-யை கொல்வதற்கு முயற்சி செய்யப்பட்டது உண்மையே என்கிறார் பினாங்கு போலீஸ் தலைவர் மஹாஷித்லா: கொரிய பாப் நடன இசைக் கலைஞர் Psy பெரிய நட்சத்திரம் ஆவார். அவர் எந்த நாட்டுக்குச் சென்றாலும் பெரிய…

அன்வார் வாக்குறுதி மீதான கால வரம்பை பிகேஆர் சிவராசா விளக்குகிறார்

பக்காத்தான் ராக்யாட் கூட்டரசு அதிகாரத்தை எடுத்துக் கொண்டால் ஏழை இந்தியர்களுக்கான ஹிண்ட்ராப் பெருந்திட்டம் 100 நாட்களில் அமலாக்கப்படும் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியிருப்பது 'துல்லிதமான கால வரம்பு' அல்ல எனப் பிகேஆர் சுபாங் எம்பி சிவராசா ராசைய்யா விளக்கியிருக்கிறார். வியாழன் இரவு ஷா அலாமில் 1500…

ஆஸ்திரேலிய செனட்டர் தடுத்து வைக்கப்பட்டார்

ஆஸ்திரேலிய செனட்டர் நிக் செனபோன் கோலாலம்பூர் குறைந்த கட்டண விமான முனையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். 'நாட்டின் எதிரி' எனக் கூறப்பட்ட பின்னர் அவர் இப்போது திருப்பி அனுப்பப்படுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். இன்று அதிகாலையில் விமான நிலையம் வந்தடைந்த அவர், கடந்த சில மணி நேரங்களாக குடிநுழைவுத் துறையின் தடுப்புப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளார்.…

அன்வார்: பாக்கத்தான் ஆட்சியில் அனைத்து பிரச்னைகளும் தேசியப் பிரச்னைகளாக கருதப்படும்

பாக்கதான் ரக்யாட் மக்கள் சார்புடைய ஜனநாயகத்தை நீதியை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் மூலம் உருவாக்கும் என்று பாக்கத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் நேற்று இரவு கூறினார். செம்பருத்தி இணையத்தள ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் நாளிதழ்களுடான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பேசிய அன்வார் இப்ராகிம் இனங்களுக்கிடையிலான பிளவுகள் அகற்றப்படுவதோடு எந்த…

டாக்டர் மகாதீர்: சில சீன தீவிரவாதிகளே அரசாங்க மாற்றத்தை ஆதரிக்கின்றனர்

சீன வாக்காளர்கள் இப்போது பக்காத்தான் ராக்யாட் பக்கம் சாய்வதாகத் தோன்றினாலும் அந்த எண்ணத்தை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நிராகரித்துள்ளார். சில சீன தீவிரவாதிகளே அரசாங்க மாற்றத்தை ஆதரிக்கின்றனர் என அவர் இன்று சைனா பிரஸ் நாளேட்டில் வெளியான பேட்டியில் அவர் சொன்னார். மலேசியாவின் வளர்ச்சிக்கு பாரிசான்…

ஹிண்டராப்-பக்காத்தான் விவாதங்களை கசிய விடுவது தீய நோக்கம் கொண்டது, பி…

2013 பிப்ரவரி 14 தேதி வெளியான மலேசியாகினியில் வெளியான டெரன்ஸ் நெட்டோ கட்டுரை பற்றி நான் கருத்துரைக்கிறேன். இந்த விளக்கத்தைத் தரும் போது நான் பிகேஆர்-கட்சியுடன் 2012 நவம்பர் முதல் தேதி நடத்தப்பட்ட உயர் நிலையிலான ரகசிய விவாதங்களையும் பக்காத்தான் உயர் நிலைத் தலைவர்களுடன் தொடரும் அடுத்தடுத்த கூட்டங்கள்…

தேர்தல் தோல்வி பயம் பில்லியன் ரிங்கிட் பெறும் குத்தகைகளை வெளியிடுவதற்குக்…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தமது பதவிக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் பில்லியன் ரிங்கிட் திட்டங்களை அவசரம் அவசரமாக வழங்குவதற்கு வரும் தேர்தலில் தோல்வி காணக் கூடும் என்ற பயம் காரணமா என டிஏபி இன்று வினவியது. தனியார் மயத் திட்டங்கள் வழங்கப்படும் வேகத்தைப் பார்க்கும் போது இரண்டு…

யூனியன் தலைவர்: அன்வாரை எதிர்த்து மகாதிர் போட்டியிட வேண்டும்

அன்வார் இப்ராகிமைத் தொடர்ந்து சாடிவரும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு தேர்தலில் அவரை எதிர்த்து நிற்கும் துணிச்சல் உண்டா என்று சவால் விடுத்துள்ளார் முன்னாள் யூனியன் தலைவர் ஒருவர். “அன்வார் பற்றி நீண்ட காலமாக தப்பும் தவறுமாகக் கூறப்பட்டு வந்துள்ளது”. அதற்கு முடிவுகட்ட இருவரும் தேர்தலில் போட்டியிட…

குவான் எங்: பிரதமர் உயிருக்கு ஆபத்தா? எங்கே ஆதாரம்?

பினாங்கில் பிரதமர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருந்ததாகக் கூறுவது அம்மாநிலத்தின் தோற்றத்தைக் கெடுப்பதால் அது பற்றி பிஎன் விளக்க வேண்டும் என்று முதலமைச்சர் லிம் குவான் எங் கேட்டுக்கொண்டிருக்கிறார். “பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்பட்டதாக கூறியதை மாநில பிஎன் தலைவர் டெங் சாங்…

அன்வார்: பிஎஸ்எம் அடையாளச் சின்னம் மக்களுக்குக் குழப்பம் தரலாம்

பார்டி சோசலிஸ் மலேசியா(பிஎஸ்எம்)-வின் கைமுட்டிச் சின்னம், மாற்றரசுக் கட்சியின் தேர்தல் பரப்புரையின்போது பயன்படுத்தப்படுவதற்கு அவ்வளவு பொருத்தமானதாக இராது என்று எண்ணுகிறார் பக்காத்தான் ரக்யாட் பெருந்தலைவர் அன்வார் இப்ராகிம். “கடந்த மாதம் சுங்கை சிப்புட் சென்றிருந்தேன். அதன்(சின்னம்) தொடர்பில் அங்கு குழப்பம் நிலவுவதைக் கண்டேன். அதைப் பார்த்து பலமாதிரியாக நினைத்துக்கொள்கிறார்கள்.…

‘வெற்றி பெற்ற 100 நாட்களில் ஹிண்டராப் பெருந்திட்டம் நடைமுறைக்கு வரும்’

பக்காத்தான் ராக்யாட் கூட்டரசு அதிகாரத்தை ஏற்குமானால் இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்னைகளைத் தீர்க்க ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழு வெளியிட்டுள்ள ஐந்தாண்டு பெருந்திட்டம் 100 நாட்களுக்குள் அமலாக்கப்படும் என பக்காத்தான் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். "பக்காத்தான் புத்ராஜெயாவைக் கைப்பற்றிய 100 நாட்களுக்குள் நாங்கள்…

செயல்படவில்லை என்று அனாக் கூறுவதற்கு ஹுலு சிலாங்கூர் போலீஸ் மறுப்பு

பிப்ரவரி 4-இல், பெல்டா சுங்கை தெங்கியில் பாஸ்-ஆதரவு என்ஜிஓ ஒன்று நடத்திய ஒரு செராமாவில் குழப்பம் ஏற்படுவதை போலீசார் தடுக்கவில்லை என்று கூறப்படுவதை ஹுலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பிரிண்டெண்டண்ட் நொரெல் அஸ்மி யாஹ்யா மறுத்தார். அந்நிகழ்வுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு 30 போலீசாருக்கு  உத்தரவிட்டிருந்ததாக நெரெல் அஸ்மி…

கட்சி ஆதரவாளர்கள் முதிர்ச்சியை காட்ட வேண்டும் என்கிறார் இப்ராஹிம் அலி

அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் 13வது பொதுத் தேர்தலில் முதிர்ச்சியைக் காட்ட வேண்டும் என்றும் உணர்ச்சி வயப்பட்டு விரும்பதகாத சம்பவங்களுக்கு வழி வகுத்து விடக் கூடாது. இவ்வாறு கூறும் பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி, பொதுத் தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் ஒவ்வொருவரும் அதனை திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு…

வாக்குகளை வாங்குவதற்கு எம்ஏசிசி ‘அங்கீகாரம்’ அளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது

ஊழல் மீதான 1954ம் ஆண்டுக்கான தேர்தல் குற்றங்கள் சட்டத்துக்கு எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வழங்கியுள்ள விளக்கம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அதனை அவசியம் மறுக்க வேண்டும். பிப்ரவரி 13ம் தேதி சின் சியூ நாளேட்டில் வெளியான முதல் பக்கத் தலைப்புச் செய்தி இது: "தேர்தல்…

இண்ட்ராப் அரசியல் கட்சியா அல்லது உரிமைக்காகப் போராடும் இயக்கமா?

உங்கள் கருத்து: ‘இப்ப.... தொகுதி கேட்பீங்க, அப்புறமா அமைச்சர் பதவி கேட்பீங்க’ இடக் கோரிக்கையால்  இண்ட்ராப்-பக்காத்தான் பேச்சுகளில் முட்டுப்பாடு. பெயரிலி #47497449: அச்செய்தி உண்மையாக இருந்தால் இண்ட்ராப் செய்வது நியாயமல்ல. அது அதன் செயல்திட்டம் பற்றியும் இந்தியர் உரிமை பற்றியும் பேசுவதைத்தான் கேட்டிருக்கிறோம். இடக் கோரிக்கை பற்றிப் பேசக் கேட்டதில்லை.…

Psy-யைக் கொல்ல முயற்சி செய்யப்பட்டதாக இப்போது தெங் சொல்லிக் கொள்கிறார்

தென் கொரிய பாப் இசைப் பாடகர் Psy-யைக் கொல்ல முயற்சி செய்யப்பட்டதாக பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ் இப்போது கூறியிருக்கிறார். அதனால் தான் கடந்த திங்கட்கிழமை ஹான் சியாங் கல்லூரியில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பின் போது ‘lo shang’ நிகழ்ச்சி முடிந்ததும் மேடையிலிருந்து…

நஜிப்: ஊடுருவலுக்கு இரத்தம் சிந்தாமல் தீர்வு காணப்படும்

அரசாங்கம், லாஹாட் டத்துவில் பிலிப்பீனோ கும்பல் ஒன்று ஊடுருவல் செய்துள்ள விவகாரத்துக்கு இரத்தம் சிந்தாமல் அமைதியான முறையில் தீர்வுகாண முயலும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். சாபாவின் கிழக்குக் கரையில் நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக வருணித்த பிரதமர், பேச்சுகள் வழி அவ்விவகாரத்துக்குத் தீர்வுகண்டு சுமார் 100…

சாபா வந்த பிலிப்பினோக்கள் பற்றி மாறுபட்ட கருத்துகள்

தென் பிலிப்பீன்சின் கிளர்ச்சிப் படையிலிருந்து பிரிந்தவர்கள் என்று கருதப்படும் ஆயுதமேந்திய சுமார் 100 பேர் அடங்கிய ஒரு கும்பலைப் பிடித்து வைத்திருப்பதாக மலேசிய போலீசும் அரசாங்க அதிகாரி ஒருவரும் தெரிவித்துள்ளனர். ஆனால், பிலிப்பீன்ஸ் அதிகாரி ஒருவர், அவர்கள் ஆயுதமற்ற பிலிப்பீனோக்கள் என்றும் நிலம் கொடுக்கப்படுவதாகக் கூறப்பட்டதை நம்பி வந்தவர்கள்…

பெர்சே: அம்பிகாவுக்கு எதிரான இசி-இன் குற்றச்சாட்டு தீய நோக்கம் கொண்டது

பெர்சே 2.0, அதன் இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், மக்களிடையே விஷத்தையும் நம்பிக்கையின்மையையும் விதைத்து வருவதாக தேர்தல் ஆணைய (இசி) துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார் அண்மையில் குற்றஞ்சாட்டியிருப்பது “தீய நோக்கம் கொண்ட, பொறுப்பற்ற” செயல் என்று வருணித்துள்ளது. வான் அஹ்மட்டின் கூற்று சமூக அமைப்புகளும்…

பிஎன் ஆதரவு சபா அரசு சாரா அமைப்பு இன்னும் பார்வையாளராகவில்லை

வரும் பொதுத் தேர்தலுக்குப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள, ஆனால் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்துள்ள சபா அரசு சாரா அமைப்பு ஒன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே அதிகாரப்பூர்வமான பார்வையாளராக முடியும். FCAS என்ற சபா சீனர் சங்க சம்மேளனம் ஒர் அரசியல் கட்சிக்குப் பிரச்சாரம் செய்வதால் பார்வையாளர் தகுதியிலிருந்து அது அகற்றப்பட…

‘நஜிப் தமது ஆலோசகர்களை நீக்க வேண்டும்’

"பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கவர்ச்சிகரமான சுலோகங்களை உருவாக்குவதில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார்" நஜிப் மோசமான ஆலோசகர்களைக் கொண்ட பலவீனமான தலைவர் என்கிறார் அன்வார் சின்ன அரக்கன்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், கடந்த சில மாதங்களாக தமது தோற்றத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ள மிகவும் முக்கியமான பல பிரச்னைகள்…

போராளிகள் என்று கருதப்படும் ஆயுதமேந்திய வெளிநாட்டவர்கள் கைது

செவ்வாய்க்கிழமை, சாபா, லாஹாட் டத்துவில் மலேசிய கடலெல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஒரு கும்பலை மலேசியப் பாதுகாப்புப் படையினர் பிடித்து வைத்துள்ளனர். வெளிநாட்டவர்களான அவர்கள்  இராணுவ உடை தரித்து கையில் ஆயுதங்களையும் வைத்திருந்தனர். அவர்கள், தென் பிலிப்பீன்சில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளின் விளைவாக மலேசிய எல்லைக்குள் ஊடுருவி இருக்கலாம் என்று இன்ஸ்பெக்டர்-ஜெனரல்…

‘பொர்ன்திப்பை நிறுத்துவதற்கு நஜிப் தாய்லாந்து பிரதமருக்கு நெருக்குதல் கொடுத்தார்

போலீஸ் முரட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சி சுகுமார் மீது இரண்டாவது சவப்பரிசோதனையை தாய்லாந்து உடற்கூறு நிபுணர் டாக்டர் பொர்ன்திப் ரோஜானாசுனாந்த் நடத்துவதை தடுப்பதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சம்பந்தப்பட்டுள்ளதாக பிகேஆர் கூறிக்கொண்டுள்ளது. "நஜிப், சுகுமார் இரண்டாவது சவப்பரிசோதனை தொடர்பில் தாய்லாந்துப் பிரதமர் யிங்லுக் ஷினாவாத்ரா-உடன் தொடர்பு கொண்டார்,"…