பிஎஸ்எம் வேட்பாளர்கள் பிகேஆரின் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கும் கடிதங்கள் கொடுக்கப்படும்

பிஎஸ்எம் தலைவர் நாசிர் ஹஷிம் கோத்தா டமன்சாரா சட்டமன்றத் தொகுதியிலும் அதன் மத்திய செயல்குழு உறுப்பினர் டாக்டர் டி.ஜெயக்குமார் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியிலும் தனது சின்னத்தின்கீழ் போட்டியிட அனுமதிக்கும் கடிதங்கள் வரையப்பட்டிருப்பதாக பிகேஆர் நேற்றிரவு அறிவித்தது. பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் அக்கடிதங்களை…

தேர்தல் சீர்திருத்த போராளியை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்

பொதுத் தேர்தலின் போது வாக்களிப்பு, வாக்குகளை எண்ணுவது, பாரோங் (Pacaba) ஆகியவற்றுக்கு  முகவர்களாக பணியாற்றுவதற்குக் கட்சித் தொண்டர்களுக்கு Tindak Malaysia பயிற்சி அளித்து வருவது  தொடர்பிலான குற்றச்சாட்டு எனக் கூறப்படுவதின் தொடர்பில் தேர்தல் சீர்திருத்த போராளியான பிஒய்  வோங்கை போலீஸ் இன்று விசாரணைக்கு அழைத்தது. அரசு சாரா அமைப்பான…

நஜிப்: கமிலியா புக்கிட் சண்டான் தொகுதியில் போட்டியிட கொடுக்கப்பட்ட வாய்ப்பை…

பேராக் புக்கிட் சண்டான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை அம்னோ  மகளிர் துணைத் தலைவி கமிலியா இப்ராஹிம் நிராகரித்து விட்டதாக பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்  கூறுகிறார். ஆகவே பொதுத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை, பிஎன் அவரது  பணிகளைப் பாராட்டவில்லை என்ற கேள்வியே…

பினாங்கு பிஎன்: பக்காத்தான் வழங்குவதை இருமடங்காக்குவோம்

பினாங்கை பிஎன் கூட்டணி கைப்பற்றினால், இப்போதைய மாநில அரசு மூத்த குடிமக்களுக்கு வழங்கும் ரொக்க அன்பளிப்புகள் இருமடங்காக்கப்படும்.  பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயோ இவ்வாறு உறுதிகூறியுள்ளார். லிம் குவான் எங் நிர்வாகம் தொடங்கிய இக்கொள்கையை பிஎன் அரசு தொடருமா என்று கேட்கப்பட்டதற்கு,“இக் கொள்கைகளைத் தொடர்வதுடன் அதை…

டிஏபி-யின் மத்திய நிர்வாகக் குழுவுக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பில் ஆர்ஒஎஸ்…

ஆடிஏபி கட்சியின் மத்திய நிர்வாகக் குழுவை நிறுத்தி வைக்கும் கடிதத்தை ஆர்ஒஎஸ் (சங்கப்பதிவதிகாரி) மீட்டுக்  கொள்ள வேண்டும் என டிஏபி விடுத்த வேண்டுகோள் மீது ஆர்ஒஎஸ் விவாதம் நடத்தி வருகின்றது. "நாங்கள் பின்னர் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்," என அதன் தலைமை இயக்குநர் அப்துல்  ரஹ்மான் ஒஸ்மான் கூறினார்.…

வேதா அவர்களே இப்போது யார் ‘மண்டோர்’ ?

வேதா அவர்களே இந்தியர்கள் ஏழைகளாக இருக்கலாம். ஆனால் முட்டாள்கள் அல்ல. உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் கீழறுப்புச் செய்ய சுல்கிப்லி நூர்டின் போன்ற வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நஜிப்  கெட்டிக்காரர். பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் திரும்பச் செய்யுங்கள் என வேதா இந்தியர்களிடம்   சொல்கிறார் சின்ன அரக்கன்: மலேசிய…

நஜிப்பின் வலையில் ஹிண்ட்ராப் விழுந்தது; BN-க்கு வேதமூர்த்தி முழு ஆதரவு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பிஎன் -னை மீண்டும் அதிகாரத்துக்குத் திரும்பச் செய்யுமாறு ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கை குழு இந்தியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. ஆளும் கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்த ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி, தங்களுடைய நலன்களை பிஎன் மட்டுமே…

வேதா தரப்பினர் ‘ஹிண்ட்ராப் கடத்தல்காரர்கள்’ என உதயா சொல்கிறார்

ஹிண்ட்ராப் அமைப்பை உருவாக்கிய இரண்டு சகோதரர்களில் ஒருவரான பி உதயகுமார் தமது இளைய  சகோதரர் பி வேதமூர்த்தி தலைமையில் இயங்கும் ஹிண்ட்ராப் தரப்பு அந்த இயக்கத்தை 'கடத்தி விட்டதாக'  குற்றம் சாட்டியுள்ளார். ஹிண்ட்ராப் பெருந்திட்டம் எனக் கூறப்படும் ஆவணத்தை பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் அங்கீகரிக்கும்…

‘பினாங்கில் தீர்வையற்ற துறைமுகம் மீண்டும் கொண்டுவரப்படும்’

இன்று பினாங்கில் வெளியிடப்பட்ட அதன் தேர்தல் கொள்கை அறிக்கையில் மாநில பிஎன் பினாங்கில் தீர்வையற்ற துறைமுகம் மீண்டும் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது. கடந்த ஆண்டிலிருந்தே இந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டு வருகிறது.  இதே வாக்குறுதியை பக்காத்தான் ரக்யாட்டும் அதன் பரப்புரைகளில் சொல்லி வருகிறது. தீர்வையற்ற துறைமுகம் இருந்தால் பினாங்கு…

இசி தலைவர்: டிஏபி தேர்தலில் போட்டியிட தடையில்லை

சங்கப்பதிவதிகாரி அலுவலகம்   (ஆர்ஓஎஸ்)  டிஏபி மத்திய நிர்வாகக் குழுவை  இரத்துச் செய்திருந்தாலும்  அக் கட்சி பொதுத் தேர்தலுக்கு வேட்பாளர்களை நியமனம் செய்வதற்குத் தடை ஏதுமில்லை. இதைத் தேர்தல் ஆணைய (இசி)த் தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் இன்று பிற்பகல் உறுதிப்படுத்தினார். “அதனால் பாதிப்பில்லை. அவர்கள் தேர்தலில் போட்டியிடலாம்”,…

நடவடிக்கை மய்யங்கள் இயங்கவில்லை எனச் சொல்லப்படுவதை பினாங்கு அம்னோ மறுக்கிறது

பினாங்கு பிஎன் வேட்பாளர் பட்டியல் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக அந்த மாநில அம்னோவின் பல  நடவடிக்கை மய்யங்கள் மூடப்பட்டு விட்டது எனச் சொல்லப்படுவதை அந்த மாநில அம்னோ தொடர்புக் குழுத்  தலைவர் ஜைனல் அபிடின் ஒஸ்மான் மறுத்துள்ளார். "இது வரை எந்த நடவடிக்கை மய்யமும் மூடப்படவில்லை. அவை…

ஆர்ஒஎஸ் டிஏபி-யின் மத்திய நிர்வாகக் குழு பட்டியலை அங்கீகரிக்கவில்லை

டிஏபி மத்திய நிர்வாகக் குழுவை ஆர்ஒஎஸ் என்ற சங்கப்பதிவதிகாரி அலுவலகம் அங்கீகரிக்கவில்லை என்று  அந்தக் கட்சிக்குத் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை அந்த அலுவலகம் அனுப்பியிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. வரும் தேர்தலுக்கான வேட்பாளர் நியமன நாளுக்கு இன்னும் இரண்டு நாள் இருக்கும் வேளையில் அந்தக்  கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஆர்ஒஎஸ் முடிவினால்…

பாஸ் கட்சியால் பிஎஸ்எம் தலைவர் தொகுதியில் சர்ச்சை தொடர்கிறது

கோத்தா டமன்சாரா சட்டமன்றத் தொகுதியில் பிஎஸ்எம் தலைவர் நாசிர் ஹஷிம் பிகேஆரின் சின்னத்தில் போட்டியிடுவார் எனப் பேசி முடிவுகாணப்பட்டுள்ள வேளையில் இப்போது பாஸ் கட்சியால் பிரச்னை உருவாகும்போல் தெரிகிறது. அத்தொகுதிமீது அதுவும் கண்வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. சினார் ஹரியானில் வெளியாகியுள்ள ஒரு செய்தியை அடுத்து இப்படியொரு பேச்சு அடிபடுகிறது. சுபாங்…

ஒதுக்கப்பட்டதால் அம்னோ மகளிர் துணைத் தலைவி ஏமாற்றம்

தம்மை பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் ஒரு வேட்பாளராக நிறுத்தாது குறித்து அம்னோ மகளிர் துணைத் தலைவி காமிலியா இப்ராஹிம் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளார். அந்தப் பிரிவின் உயர் தலைவர்கள் ஆற்றியுள்ள பங்கை கூட்டணி அங்கீகரிக்கத் தவறி விட்டதையே அது  காட்டுகிறது என அவர் சொன்னார். மகளிர்…

கேமிரன் ஹைலண்ட்ஸில் பழனிவேலை எதிர்த்து எம் மனோகரன் போட்டி

நடப்பு தெலுக் இந்தான் டிஏபி எம்பி எம் மனோகரன், கேமிரன் ஹைலண்ட்ஸ் நாடாளுமன்றத் தொகுதிக்கான  போராட்டத்தில் மஇகா தலைவர் ஜி பழனிவேலை எதிர்த்துக் களமிறங்குவார். டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று அந்தத் தகவலை அறிவித்தார். பழனிவேல் மஇகா தலைவராகவும் கூட்டரசு அமைச்சராகவும் இருப்பதால் அந்த…

பிஎன் பயமுறுத்துகின்றது, வளங்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றது என பெர்சே சாடுகிறது

பிஎன் தனது பிரச்சாரத்தின் போது மக்களுக்கு அச்சத்தை மூட்டுவதாகவும் அரசாங்க வளங்களைத் தவறாகப்  பயன்படுத்துவதாகவும் பெர்சே குற்றம் சாட்டியுள்ளது. "அரசாங்க மாற்றம் இடையூறுகளை ஏற்படுத்தும் எனக் கூறி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த பிஎன் தலைவர்கள் இன்னும் முயன்று வருகின்றனர்," என அந்த அமைப்பைச் சேர்ந்த ஐரின் பெர்ணாண்டஸ் இன்று…

அரசியல் வன்முறை: நஸ்ரிக்கும் போலீசுக்கும் பெர்சே பாராட்டு

தேர்தல் சீரமைப்புக்காக போராடும் பெர்சே அமைப்பு, அரசியல் வன்செயல்களுக்கு எதிராக போலீசார் விரைந்து நடவடிக்கை எடுப்பர் என்று அறிவித்துள்ள பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீசைப் பாராட்டியுள்ளது. அதேவேளை, விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் அரசியல் வன்செயல்கள் மீதான போலீஸ் விசாரணை…

நஜிப் நேர்மை வாக்குறுதியை மீறியதாக வெளிப்படைக் கழகம் கூறுகிறது

பிஎன் தலைவர் நஜிப் ரசாக், பல்வேறு சலுகைகளை வழங்கியதின் மூலமும் தம்மை ஆதரிக்குமாறு அரசு  ஊழியர்களைக் கேட்டுக் கொண்டதின் மூலமும் தாம் கையெழுத்திட்ட நேர்மை வாக்குறுதியை மீறியுள்ளதாக மலேசிய அனைத்துலக வெளிப்படைக் கழகம் கூறியுள்ளது. அது சுட்டிக் காட்டியுள் சில விஷயங்கள்: 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட…

பாஸில் ஜைட் இப்ராகிமுக்கு இடமில்லை

கிளந்தான் பாஸ், கோத்தா பாரு நாடாளுமன்றத் தொகுதியில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான தகியுடின் ஹசானைக் களமிறக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதனால், முன்னாள் பிரதமர்துறை அமைச்சர் ஜைட் இப்ராகிமுக்கு அங்கு வேட்பாளராக நிறுத்தப்படும் வாய்ப்பு இல்லை என்றாகிவிட்டது. அத்துடன் கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட்டின் மகன்…

இந்து மதத்தை இழிவுபடுத்தியவருக்கு நஜிப் அங்கிகாரம்; இந்தியர்கள் கொதிப்பு

இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசிய பெர்காசா உதவித் தலைவர் சுல்கிப்ளி நோர்டின் ஷா ஆலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டிருப்பது இந்தியர்களிடையே கடும் ஆத்திரத்தை உண்டுபண்ணியுள்ளது. (காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்) இந்து சமயத்தையும் இந்துக் கடவுள்களையும் பகிரங்கமாக இழிவுபடுத்திப் பேசி, இந்தியர்களின் மனதைப் புண்படுத்திய முன்னாள்…

ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தில் நஜிப் இன்று கையொப்பமிடுகிறார்

ஹிண்ட்ராப் மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டிற்காக வரைந்துள்ள அதன் ஆறு கூறுகள் அடங்கிய பெருந்திட்டத்தை பாரிசான் ஏற்றுகொண்டுள்ளது. அது குறித்த சில அறிவிப்புகளை பிரதமர் நஜிப் இன்று செய்வார் என்று ஹிண்ட்ராப் தேசிய ஆலோசகர் என். கணேசன் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார். பிரதமர் கலந்துகொண்டு ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தில் கையொப்பமிடும்…

பினாங்கு பிஎன் வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு கூடுகிறது

பினாங்கு பிஎன் வேட்பாளர் பட்டியலிலிருந்து விடுபட்ட மூன்று பிஎன் தலைவர்கள் தங்கள் ஆத்திரத்தைக்  கொட்டி தீர்த்ததைத் தொடர்ந்து மே 5 13வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தெரிவு செய்யப்பட்ட  வேட்பாளர்களுக்கு மேலும் பல பினாங்கு பிஎன் உறுப்புக் கட்சிகளின் தொகுதிகள் ஆட்சேபம்  தெரிவித்துள்ளன. கெராக்கானைச் சேர்ந்த பிஎன் மாச்சாங்…

தேர்தல் அறிக்கை மீதான விவாதத்துக்கு நஜிப் வரவில்லை

நேற்று கோலாலும்பூர், சிலாங்கூர் அசெம்ளி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் கொள்கை அறிக்கை மீதான விவாதத்துக்கு, அழைப்பு அனுப்பப்பட்ட போதிலும்,  எதிர்பார்க்கப்பட்டதுபோல் நஜிப் வரவில்லை. பெர்சே, நஜிப்புக்கும் மாற்றரசு கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கும் முன்கூட்டியே அழைப்பு அனுப்பி வைத்திருந்தது. ஆனால், நஜிப் அழைப்புக்குப் பதிலளிக்கவில்லை. தம் பிரதிநிதியாக…