நிதி அமைச்சகம் இனி "வழக்கமான முறைப்படி" இயங்க முடியாது என்று முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் சுவா சோய் லெக் தெரிவித்துள்ளார். பணியாளர் சோர்வு, நிபுணர்களின் பற்றாக்குறை, குறைந்த ஊதியம் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைமுறை நோய்கள் ஆகியவை பொது சுகாதார அமைப்பை ஒரு நெருக்கடிக்குத் தள்ளுவதாக அவர்…
சிலாங்கூர், நீர்வளச் சொத்துகளுக்காக ரிம9.65 பில்லியன் கொடுக்க முன்வந்தது
சிலாங்கூர் அரசு அம்மாநிலத்தில் நீர்வளத்தை நிர்வகிக்கக் குத்தகை பெற்றுள்ள நான்கு நிறுவனங்களையும் எடுத்துக்கொள்ள ரிம9.65 பில்லியன் கொடுக்க முன்வந்துள்ளது. ஷியாரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட்(சபாஷ்), புஞ்சாக் நியாகா சென். பெர்ஹாட், கொன்சோர்டியம் அபாஸ் சென்.பெர்ஹாட், ஷியாரிகாட் பெங்குலுவார் ஆயர் சிலாங்கூர் ஹோல்டிங் (ஸ்ப்லேஷ்) ஆகிய நான்கு…
போலீசார்: லஹாட் டத்து இழுபறி கட்டுக்குள் இருக்கிறது
லஹாட் டத்துவில் ஊருருவியுள்ள ஆயுதமேந்திய நபர்களை வெளியேற்றுவதற்கு தாங்கள் உறுதியாகச் செயல்படவில்லை எனக் கூறப்படுவதை போலீசார் மறுத்துள்ளனர். "நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும்," என அவர்கள் வலியுறுத்தினர். "நீங்கள் ஊகங்களை உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும் என நான்…
வெளிநாட்டில் உள்ள வாக்காளர்கள் குறைந்த கட்டணத்தில் ஏர்ஏசியா X-ல் பயணம்…
அதைத் தேசிய சேவை என்பீர்களோ அல்லது வியாபாரத் தந்திரம் என்று அழைப்பீர்களோ ஆனால், ஏர்ஏசியா X வெளிநாடுகளிலிருந்து வாக்களிப்பதற்காக நாடு திரும்பும் மலேசியர்களுக்குக் குறைந்த கட்டணப் பயணச் சேவையை வழங்க முன்வந்துள்ளது. தேர்தல் எப்போது என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால், வெளிநாடுகளில் உள்ள மலேசிய வாக்காளர்கள் நாடு திரும்ப…
‘UEC சான்றிதழை இப்போதே அங்கீகரியுங்கள், தேர்தல் பிரச்சாரத்தின் போது அல்ல’
UEC என்ற ஐக்கிய தேர்வு சான்றிதழை உடனடியாக அங்கீகரிக்குமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை பக்காத்தான் ராக்யாட் கேட்டுக் கொண்டுள்ளது. பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குகளை வாங்குவதற்கான தந்திரமாக அதனைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அது கூறியது. பொதுப் பல்கலைக்கழகங்களுக்கும் பொதுச் சேவைக்கும் நுழைவுத் தகுதியாக அந்த…
ஜுய் மெங்: கர்பால் குறித்து நான் ஏமாற்றமடைந்துள்ளேன்
டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ்-வை வெளிப்படையாக ஆதரித்துள்ளது குறித்தும் தமக்கு எதிரான விசாரணையைத் தொடங்குமாறு பிகேஆர் தலைமைத்துவத்தை கேட்டுக் கொண்டது குறித்தும் தாம் அவர் மீது 'மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக' ஜோகூர் பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங்…
தவறான தடத்தில் இண்ட்ராப் – கணபதி ராவ், வசந்தகுமார்
இண்ட்ராபுடன் கருத்துப்பூசலில் ஈடுபடும் நோக்கம் எங்களுக்கு இல்லை. இந்திய ஏழைகள் சமூக-பொருளாதார மேம்பாடு காண்பதற்கான இண்ட்ராபின் செயல்திட்டம் மீது ஒரு விவாதம் நடக்கிறது. அதில் எங்களின் கருத்தை முன்வைக்கவும் அந்த இலக்கை அடைவதற்கு சிறந்த வழியை எடுத்துரைக்கவும் விரும்புகிறோம். மலேசியர்கள் என்ற முறையிலும், 2007-இல் இண்ட்ராப் இயக்கத்திலும் அவ்வாண்டு…
திரெங்கானு விளையாட்டரங்கக் கூரை மீண்டும் இடிந்து விழுந்தது
கோலா திரெங்கானுவில் சுல்தான் மிசான் ஸ்டேடியத்தின் எஃகுக் கூரை இன்று காலை இடிந்து விழுந்ததில் கட்டுமானத் தொழிலாளர்கள் மூவர் காயமடைந்தனர். இது ஏற்கனவே 2009-இல் இடிந்து விழுந்த கூரைதான். அந்தக் கூரைப்பகுதியைப் பழுதுபார்க்கும் வேலை கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அது மீண்டும் இடிந்து விழுந்தது.…
யாஸிட்டும் ஹாலிமாவும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களை மறுத்து விசாரணை கோரினர்
2012ம் ஆண்டுக்கான பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் (சொஸ்மா) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முதலாவது இரண்டு தனிநபர்கள் மீதான விசாரணை மே 20ம் தேதி தொடங்கும். கோலாலம்பூர் உயர் நீதிமன்றதில் இன்று காலை குற்றச்சாட்டுக்கள் வாசிக்கப்பட்ட பின்னர் யாஸிட சுபாட்டும் ஹலிமா ஹுசேனும் "குற்றம் செய்யவில்லை, நான்…
ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தை அமலாக்க 22.5 பில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை
"ஏழை இந்தியர்களையும் ஒதுக்கப்பட்டவர்களையும் முக்கிய தேசிய மேம்பாட்டு நீரோடையில் இணைப்பதற்கான ஐந்தாண்டுப் Read More
மலாயாப் பல்கலைக்கழகக் கருத்தரங்கில் நுருல் இஸ்ஸாவுக்கு ஹீரோ வரவேற்பு
லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் மலாயாப் பல்கலைக்கழகக் கருத்தரங்கு ஒன்றில் நேற்று பேசவிருந்தது அரசாங்க நெருக்குதலைத் தொடர்ந்து ரத்துச் செய்யப்பட்ட பின்னர் அந்த நிகழ்வுக்குச் சென்ற அவருக்கு ஹீரோ வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டத்தில் ஒருவராக அதில் கலந்து கொள்ளும் பொருட்டு நேற்று பிற்பகல் விரிவுரை மண்டபத்துக்குள்…
பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் உயிரோடு பிடிக்கப்பட்டு சுட்டுக்கொலை!
முள்ளிவாய்க்காலின் இறுதிநேரக் கொடூரக் காட்சிகளால் உலகமே அதிர்ச்சி யுற்றிருக்கையில், இப்போது கிடைத்திருப்பவை இதயத்தை ஒருகணம் நிறுத்தி வைக்கக் கூடிய அதி கொடூரங்கள் நிறைந்த காட்சிகள் என 'The Independent' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு சந்தைப் பகுதியில் தொலைந்து போன சிறு குழந்தை போல் ஒரு மூலையில் அந்தச்…
மலேசிய நாடாளுமன்ற கூட்டமைப்பு இலங்கைக்கு எதிராக போர்க்கொடி!
இன்று நாடாளுமன்றத்தில் நடந்த வட்டமேசை கூட்டத்தில் சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானங்களை நாடாளுமன்ற கூட்டமைப்பு நிறைவேற்றியதின்வழி சிறீலங்கா மீதான மலேசியாவின் வெளியுறவுக் கொள்கை பலத்த மாற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறீலங்கா சிங்கள அரசாங்கம் அந்நாட்டு குடிமக்களாகிய தமிழர்களை இனப்படுகொலை செய்ததோடு மட்டுமல்லாமல் எஞ்சியிருக்கும் தமிழர்களையும் தொடர்ந்து துன்புறுத்தி அவர்களையும்…
ஹிஷாமுடின்: லாஹாட் டத்து ஊடுருவல் மீது பேச்சுக்களுக்கு இன்னும் வாய்ப்பு…
லாஹாட் டத்துவில் உள்ள கம்போங் தண்டுவோவில் பிப்ரவரி 12ம் தேதியிலிருந்து நீடிக்கும் ஊடுருவல் பிரச்னைக்குச் சிறந்த தீர்வு காண பேச்சுக்கள் நடத்த இன்னும் வாய்ப்பு உள்ளதாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறுகிறார். விரும்பத்தகாத சம்பவங்கள், ரத்தக் களறி அல்லது மரணங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு பேச்சுக்களுக்கு இன்னும்…
தெரெசா: வெள்ளத்துக்குக் காரணம் எல்ஆர்டி திட்டம், சிலாங்கூர் தவறு அல்ல
பூச்சோங்கில் நேற்று மாலை ஏற்பட்ட வெள்ளத்துக்கு அங்கு மேற்கொள்ளப்படும் எல்ஆர்டி திட்டம் காரணமாகும். கால்வாய்களை சிலாங்கூர் அரசாங்கம் முறையாக பராமரிக்கத் தவறி விட்டதாகக் கூறப்படுவது காரணமல்ல என சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் தெரெசா கோக் கூறுகிறார். அந்தத் திட்டத்துக்கான கட்டுமானப் பொருட்கள் அந்தப் பகுதியிலிருந்து நீர் வெளியேறுவதை…
மலாயாப் பல்கலைக்கழக கருத்தரங்கு மீது அரசாங்கம் அழுத்தம் கொடுத்தது என்கிறார்…
மலாயாப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஜனநாயக, தேர்தல்கள் மய்யம் ஏற்பாடு செய்த தேர்தல் மீதான கருத்தரங்கை ரத்துச் செய்யுமாறு அரசாங்கம் அழுத்தம் கொடுத்த பின்னர் சில திருத்தங்களுடன் இன்று நடத்தப்பட்டது. அந்த உத்தரவு பிரதமர் அலுவலகத்திடமிருந்தும் உயர் கல்வி அமைச்சிலிருந்தும் வந்ததாக அந்த மய்யத்தின் இயக்குநர் முகமட் ரெட்சுவான் ஒஸ்மான்…
ஜோகூரில் டிஏபி, பிகேஆர் தலைவர்களுக்கு வாய்ப்பூட்டு
நேற்று ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவும் அவரின் பிகேஆர் சகாவான சுவா ஜுய் மெங்கும் வெளிப்படையாக சர்ச்சையிட்டுக்கொண்டதை அடுத்து இருவருக்கும் வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது. “பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமைத் தொடர்பு கொண்டேன். சுவாவும் பூ-வும் ஜோகூரில் மாநில டிஏபி, பிகேஆர் உறவுகள் பற்றி அதிலும்…
விஸ்வரூபம் படத்தைத் திரையிட அனுமதி வழங்கப்பட்டது
உள்துறை அமைச்சு விஸ்வரூபம் திரைப்படத்துக்கு விதித்திருந்த தடையை அகற்றியுள்ளது. இஸ்லாத்தைத் தவறாகச் சித்திரிப்பதாகக் குறைகூறப்பட்ட அப்படத்தில் மேலும் சில காட்சிகள் நீக்கப்பட்டுத் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் அப்படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் ராஜா அஸஹார் ராஜா அப்துல் மனாப் கூறினார். “சம்பந்தப்பட்ட…
பக்காத்தான், கூட்டுக் கொள்கை விளக்க அறிக்கையை அடுத்த வாரம் வெளியிடும்
எந்த நேரத்திலும் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் மாற்றரசுக்கட்சியான பக்காத்தான் ரக்யாட் அடுத்த வாரம் அதன் கொள்கை விளக்க அறிக்கையை வெளியிட்டு தேர்தல் பரப்புரையைத் தொடங்க ஆயத்தமாகிறது. “கொள்கை விளக்க அறிக்கை வெளியிடப்படுவது 13வது பொதுத் தேர்தல் பரப்புரையின் தொடக்கமாகவும் அமையும்.”, என்று கூறிய பிகேஆர் வியூக…
பெர்சே: தேர்தல் பரப்புரை விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை தேவை
தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்காக போராடும் கூட்டமைப்பான பெர்சே, பரப்புரைக்கான காலம் ஒதுக்கப்படுவதற்குமுன்பே பரப்புரைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக தேர்தல் குற்றச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஜோகூர் பாருவில், ‘Undilah Barisan Nasional’(பிஎன்னுக்கு வாக்களியுங்கள்) என்ற சொற்களுடன் பிஎன் கொடிகள் பறக்கவிடப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருப்பதை அது சுட்டிக்காட்டியது.…
’13வது பொதுத் தேர்தலை நோக்கிச் செல்லும் பிஎன் -னிடம் வழக்கமான…
கடந்த பொதுத் தேர்தல்களில் பிஎன் நல்ல வெற்றியை அடைவதற்கு பங்காற்றியுள்ள 'முன்னணி நிலை' இப்போது அந்தக் கூட்டணியிடம் இல்லை. 2008 தேர்தலில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பிஎன் பெறாததால் அது தேர்தல் தொகுதி எல்லைகளை மறு நிர்ணயம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் போனதே அதற்குக்…
‘சிறுபான்மை இனங்களுடைய பண்பாடுகளைப் பாதுகாக்கும் கட்சியை ஆதரியுங்கள்’
சிறுபான்மை இனங்கள் தங்களது பண்பாடுகளை எந்த விதமான தடையுமின்றி பின்பற்றுவதை உறுதி செய்யும் கட்சிக்கு மக்களுக்கு வலுவான ஆதரவை அளிக்க வேண்டும் என பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். எதிர்க்கட்சிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் மாநிலங்களில் தங்களது பண்பாடுகளையும் பாராம்பரியங்களையும் பின்பற்றுவதற்கான தங்கள் சுதந்திரத்துக்குக்…
ஜோகூரில் பிகேஆர் கட்சியுடன் டிஏபி நடத்தும் போராட்டத்தில் கர்பால், பூ-வை…
ஜோகூரில் டிஏபி-க்கு எதிராக அந்த மாநில பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங் நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டியுள்ள அந்த மாநில டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ்-வை டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் ஆதரித்துள்ளார். ஜோகூரில் பக்காத்தான் உறுப்புக் கட்சிகளுக்கு இடையிலான வலுவான ஒத்துழைப்புக்கு…
தண்டா புத்ரா வழி நஜிப் வாழ்வா தாழ்வா என்ற நிலைக்கு…
"இந்த நாடு குழப்பத்தில் மூழ்கும் அபாயம் இருந்தாலும் கூட, அதிகாரத்தை என்ன விலை கொடுத்தாவது அதிகாரத்தை தக்க வைத்துள்ள நஜிம் போராடுகிறார் என்பதையே அந்த நடவடிக்கை காட்டுகின்றது" மே 13 திரைப்படம் பெல்டா குடியேற்றக்காரர்களுக்குக் காட்டப்பட வேண்டும் என பிரதமர் விரும்புகிறார் கைரோஸ்: பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு மட்டும் மே…


